ஹெச் 1பி விசாவிற்கு அதிரடி தடை ......!!! டிரம்ப் திட்டவட்ட முடிவு .........!!!

அமெரிக்காவின் ஹெச் 1பி விசா மூலம் பல்வேறு நாடுகள் , அமெரிக்காவிற்கு சென்று வேலை செய்து வருகின்றனர்.

குறிப்பாக ஐடி ஊழியர்கள் அதிகளவில் அமெரிக்காவில் பணி புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வாகி இருக்கும் டொனால்டு டிரம்ப் திட்டவட்டமாகக் சில கருத்துக்களை கூறியுள்ளார்.

அதன்படி, ஹெச் 1பி விசா மூலம், வெளிநாடுகளில் இருந்து வந்து, அதிக எண்ணிகையில் அமெரிக்காவில், வேலை செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் சில மாதங்கள் அல்லது சில வருடங்களுக்கு இந்த விசா மூலம் , அமெரிக்காவில் தங்கி வேலை செய்வது வழக்கம். இன்னும் சொல்லப் போனால், இந்த விசா மூலம், சில ஆண்டுகள் அங்கிருந்த பின்னர், நிரந்தர குடியுரிமையையும் சிலர் பெற்றுள்ளனர்.

ஆனால் தற்போது இதெற்கெல்லாம் முற்றுபுள்ளி வைக்கும் விதமாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

ஹெச் 1பி விசா மூலம் , வெளிநாட்டினர் மட்டுமே , தன் நாட்டில் பயனடைவதால், அமெரிக்கர்கள் வேலை இன்றி தவிக்கும் நிலை உள்ளது என்றும் , இதனை கட்டுப்படுத்த தற்போது ஹெச் 1பி விசா மூலம் அமெரிக்கா வருவதற்கு இனி தடை விதிக்கப்படும் என அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்த முக்கிய ஆலோசனைகளை , அமெரிக்க நிறுவனங்களுக்கு வழங்கவும் திட்டமிட்டுள்ளாதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரம்ப்பின் இந்த அதிரடி முடிவால் , ஐ.டி., மற்றும் பிபிஓ ஊழியர்கள் அதிகம் பாதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.