யாரை பிடிப்பது ? எப்படி பிடிப்பது ...? ஊழியர்கள் இல்லாமல் திணறுது வருமானவரித்துறை....!!!
யாரை பிடிப்பது ? எப்படி பிடிப்பது ...? ஊழியர்கள் இல்லாமல் திணறுது வருமானவரித்துறை....!!!
கருப்பு பணத்தை ஒழிக்கும் பொருட்டு , பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்பு, பல நெருக்கடிகளை மக்கள் தினம் தினம் சந்தித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக , மக்கள் கையில் இருந்த பணத்தை எல்லாம் வங்கி கணக்கில் செலுத்தினர். அதுவும் கூட ஒருவரின் வங்கி கணக்கில் இரண்டரை லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும், அதற்கு மேல் இருந்தால் , அதற்குண்டான வரி மற்றும் கணக்கு காட்ட வேண்டும் என்பதால், பல பண முதலைகள் , பணம் இல்லாத ஏழை மக்களின் வங்கி கணக்கை குறி வைத்து, அதில் டெபாசிட் செய்தும், ஒரு சிலர் கமிஷன் வாங்கிகொண்டு, கருப்புன் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதை எல்லாம் அறிந்தும் , இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும், மேற்கொண்டு விசாரணை மேற்கொள்ளவும் , போதுமான ஊழியர்கள் வருமான வரித்துறையில் இல்லை எனவும் , எனவே, போதுமான ஊழியர்களை நியமித்து, உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என , வருமான வரி ஊழியர் கூட்டமைப்பு மற்றும் வருமான வரித்துறை கெசட் அதிகாரிகள் சங்கம் இணைந்து மத்திய அரசுக்கு ( பிரதமர் ) கடிதம் எழுதப்பட்டுள்ளது .
வருமான வரித்துறையில் தற்போது 30 - 35 % பணியிடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.