ஆதார் அட்டை விவரங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஜூன் 14, 2024 வரை நீட்டித்துள்ளது.

ஆதார் என்பது மத்திய மற்றும் மாநில அரசுகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் எந்தவொரு சேவைகளுக்கும் தேவைப்படும் ஒரு முக்கியமான ஆவணமாகும். தனிநபர்களுக்கான முக்கியமான அடையாள ஆதாரமாகவும் இது அமைந்தது. அதனால்தான் ஆதாரில் உள்ள விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்துவது அவசியம் ஆகும். பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் பிற அத்தியாவசிய விவரங்கள் உட்பட ஆதார் தகவலுக்கான வழக்கமான அப்டேட்டுகள் (புதுப்பிப்புகள்) முக்கியம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அமைத்துள்ள வழிகாட்டுதல்களின்படி, உங்கள் ஆதார் அட்டையில் அதிகப்படியான மாற்றங்களைச் செய்வது சில நேரங்களில் கூடுதல் செலவுகளை ஏற்படுத்தலாம். இருப்பினும், ஆதார் அட்டையில் குறிப்பிட்ட தகவல்களை எத்தனை முறை மாற்றலாம் அல்லது புதுப்பிக்கலாம் என்பதில் வரம்புகள் உள்ளன. அவற்றை தெரிந்து கொள்வது அவசியம்.

பிறந்த தேதி

ஆதார் அட்டையில் பிறந்த தேதியை ஒருமுறை மட்டுமே புதுப்பிக்க முடியும். மேலும் சேர்த்து, ஆதார் பதிவின் போது முதலில் பதிவு செய்யப்பட்ட பிறந்த தேதியிலிருந்து அதிகபட்சம் கூட்டல் அல்லது கழித்தல் மூன்று ஆண்டுகளுக்குள் பிறந்த தேதியில் எந்த மாற்றமும் அனுமதிக்கப்படுகிறது.

முகவரி

ஆதாரில் முகவரியை அப்டேட் செய்வதில் பல ஆப்ஷன்கள் உள்ளது. அதன்படி நீங்க உங்கள் முகவரியை எத்தனை முறை மாற்றலாம் என்பதில் எந்த தடையும் இல்லை.

பெயர்

ஆதார் அட்டை வைத்திருப்பவர் தனது பெயரை ஆதார் அட்டையில் அதிகபட்சம் இரண்டு முறை புதுப்பிக்க அனுமதிக்கப்படுவார்.

பாலினம்

குறிப்பாணையின்படி, பாலின விவரங்களை ஒருமுறை மட்டுமே புதுப்பிக்க முடியும்.

புகைப்படம்

பயனர்கள் தங்கள் புகைப்படத்தை எந்த வரம்பும் இல்லாமல் எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.

நீங்கள் இந்த வரம்பை மீறினால் என்ன செய்வது?

உங்கள் பெயர், பாலினம் அல்லது பிறந்த தேதியை ஆதார் அட்டையில் அனுமதிக்கப்பட்டதை விட அதிக முறை புதுப்பிக்க விரும்பினால், விதிவிலக்கு கையாளுதல் செயல்முறை எனப்படும் சிறப்பு செயல்முறையை நீங்கள் பின்பற்ற வேண்டும். தனிநபர்கள் தங்களின் ஆதார் அட்டை விவரங்களைப் புதுப்பிக்கத் திட்டமிடும் காலக்கெடு ஜூன் 14, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முதலில் மார்ச் 14, 2024 அன்று திட்டமிடப்பட்ட இந்த நீட்டிப்பு, குடிமக்களுக்குத் தேவையான மாற்றங்களைச் செய்வதற்கு அதிக நேரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த காலக்கெடுவிற்குப் பிறகு, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இந்த மாற்றங்களுக்கான கட்டணங்களை விதிக்கும். தங்கள் விவரங்களைப் புதுப்பிக்க, தனிநபர்கள் ஆதார் இணையதளத்தைப் பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவிஎம் மெஷின் எனப்படும் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியுமா? முடியாதா? ஓர் அலசல்!