நிஃப்டி 50, வியாழக்கிழமை தொட்ட உச்சமான 24,025 புள்ளிகளைத் தாண்டுமா என்று பார்க்க வேண்டும். அதேபோல, நிஃப்டி பேங்க் 57,500 புள்ளிகளுக்கு மேல் நிலைத்து நிற்பது மிகவும் முக்கியம்.

Share Market Update: இந்த வாரம் முழுவதும் சற்று மந்தமாக இருந்த இந்திய பங்குச்சந்தை, வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை வர்த்தகம் லாத்தை தந்தது. சந்தை நேர்மறையான நிலையில் இருப்பதால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். வர்த்தகத்தின் இடையே, சந்தை நல்ல ஏற்றத்தில் உள்ளது. நிஃப்டி குறியீடு சுமார் 90 புள்ளிகள் உயர்ந்து 24,000 என்ற இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது. சென்செக்ஸ் இன்னும் சிறப்பான நிலையில், 600 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்து 76,600-ஐ எட்டியுள்ளது.

உச்ச நிலையில் இருந்து சற்று இறங்கிய நிஃப்டி

நிஃப்டி 50 குறியீட்டைப் பொறுத்தவரை, ஏற்றப் போக்கில் வியாழக்கிழமை அடைந்த உச்சபட்ச அளவான 24,025 புள்ளிகளைத் தாண்டுமா என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். மறுபுறம், நிஃப்டி பேங்க் குறியீடு 57,500 புள்ளிகளுக்கு மேல் நிலைத்து நிற்பது முக்கியமாக இருக்கும். கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 96 டாலர் என்ற அளவில் உள்ளது. 'பிளாக் டீல்' எனப்படும் பெரிய அளவிலான பங்கு பரிவர்த்தனைகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன. சந்தையின் தற்போதைய நிலவரம் கலவையாக உள்ளது. அதாவது, சில துறைகளில் ஏற்றமும், சில துறைகளில் சரிவும் காணப்படுகிறது. ஒருபுறம், பிஎஸ்இ (BSE) மற்றும் ஏஞ்சல் ஒன் (Angel One) போன்ற மூலதனச் சந்தை தொடர்பான பங்குகளின் விலை உயர்ந்து வருகிறது. மறுபுறம், கேபிள் மற்றும் வயர் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகளின் விலை மேலும் சரியத் தொடங்கியுள்ளது.

16.5% உயர்ந்த நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை 16.5 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதே சமயம், சந்தை தொடங்கியவுடன் பாலிகேப் நிறுவனத்தின் பங்கு விலை 4.5 சதவீதம் வரை சரிந்தது. ஹெச்பிஎல் இன்ஜினியரிங் நிறுவனத்தின் பங்கு விலை 6 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. ஆனால், கேஇஐ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை 7 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது. திரிபுவன்தாஸ் பீம்ஜி ஜாவேரி லிமிடெட் (TBZ) நிறுவனத்தின் பங்கு விலை 10 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பொறுப்புத்துறப்பு: ஏசியாநெட் நியூஸ் தமிழ் எந்த இடத்திலும் முதலீட்டுக்கான ஆலோசனைகளை வழங்குவதில்லை. பங்குச்சந்தை முதலீடுகள் அபாயங்களுக்கு உட்பட்டவை. எனவே, முதலீடு செய்வதற்கு முன் நிதி ஆலோசகர்களிடம் கலந்தாலோசிப்பது அவசியம்.