ஏற்றதுடன் முடிந்த இந்தியப்பங்குச்சந்தை........!
மத்திய பட்ஜெட் அறிவிப்புகளை தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தைகள், மூன்று மாதம் கழித்து நேற்றும் இன்றும் உயர்வுடன் முடிவுற்றது.
பங்குச்சந்தைகளில் முதலீடு அதிகரிக்கவே, முன்னணி நிறுவனப் பங்குகளின் விலை மட்டுமின்றி, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனப் பங்குகளின் விளையும் உயர்ந்தது.
சென்செக்ஸ் :
வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 84.97 புள்ளிகள் அதிகரித்து, 28,226.61 புள்ளிகளில் நிலைப்பெற்றது.
நிப்டி :
தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 17.85 புள்ளிகள் உயர்ந்து, 8,734.25 புள்ளிகளில் முடிவுற்றது.
லாபம் கண்ட நிறுவனங்கள் :
Dr reddy, techm,auropharma, sunpharma உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்துடன் முடிவுற்றது.
நஷ்டத்தை சந்தித்த நிறுவனங்கள் :
Hindalco, m&m, ACC, INDUSINDBK உள்ளிட்ட நிறுவன பங்குகள் இழப்பை சந்தித்தன