புதிய ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் முதல் நாணயக் கொள்கை அறிவிப்பில், ரெப்போ விகிதம் 5.50% ஆக தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் மற்றும் பொருளாதார நிலவரத்தை ஆராய்ந்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ கூறியுள்ளது.

புதிய ஆளுநரின் முதல் அறிக்கை

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்தியா ரிசர்வ் வங்கி, ஆகஸ்ட் 6 ஆம் தேதி வெளியிட்ட நாணய கொள்கை முடிவுகள், நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. புது கவர்னராக பொறுப்பேற்றுள்ள சஞ்சய் மல்ஹோத்ரா, தனது முதல் நாணய கொள்கை மீட்டிங் முடிவுகளை வெளியிட்டார்.

வட்டி விகிதம் மாற்றமில்லை 

பலர் எதிர்பார்த்ததுபோல், ரெப்போ விகிதத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல், தற்போதைய 5.50% என்ற விகிதம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணமாக, பொருளாதார நிலைமை மற்றும் பணவீக்கக் கட்டுப்பாட்டை ஆராய்ந்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

  • ஏற்கனவே நடந்த வட்டி விகித மாற்றங்கள்: பிப்ரவரி 2025: 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து, 6.50% → 6.25%
  • ஏப்ரல் 2025: மீண்டும் 25 புள்ளிகள் குறைத்து, 6.25% → 6.00%
  • ஜூன் 2025: வியப்பூட்டும் வகையில் 50 புள்ளிகள் குறைப்பு, 6.00% → 5.50%

இதனால், இந்த ஆண்டில் மொத்தமாக 100 புள்ளிகள் குறைப்பு ஏற்பட்டது. இதன் மூலம் வீட்டு கடன், வாகன கடன், தனிநபர் கடன் ஆகியவை குறைந்த வட்டியில் வழங்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பெற்றனர்.

ஏன் இப்போது மாற்றமில்லை? 

பணவீக்க விகிதம் சீராகக் குறைந்திருப்பது, நாட்டு பொருளாதாரம் மீண்டும் மெல்லமெல்ல மேம்பட்டுவருவதை எதிர்பார்த்து வட்டி விகிதத்தை நிலைப்படுத்தும் முடிவை ஆர்பிஐ எடுத்துள்ளது.

பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், “இப்போதைக்கு ரெப்போ விகிதத்தை நிலையாக வைப்பது பாதுகாப்பான முடிவாக இருக்கும். வட்டி விகிதத்தை தொடர்ந்து குறைத்தால், பணவீக்கம் மீண்டும் வளர வாய்ப்பு உள்ளது.”

வங்கி வட்டி குறையுமா? இந்த ரெப்போ விகித நிலைத்தன்மை காரணமாக, உடனடியாக வீடு, வாகன கடன்களின் வட்டி மீண்டும் குறைய வாய்ப்பு குறைவாக இருக்கிறது. இருப்பினும், வருங்கால நாணயக் கொள்கைகளில் பணவீக்க அளவுகள் மீண்டும் கணிசமாக குறைந்தால், வட்டி விகிதங்கள் மேலும் குறைக்கப்படும் என நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த நிலைமை வங்கிகளுக்கு நிதி திட்டமிடுவதற்கும், கடன் வாங்குபவர்களுக்கு எதிர்பார்ப்புகளுடன் செயல்பட உதவும். புதிய கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ராவின் முதல் நாணயக் கொள்கை முடிவு, நிலைத்த வளர்ச்சிக்கே முன்னுரிமை வழங்குவதை உறுதிப்படுத்துகிறது.