அஞ்சலக மாத வருமானத் திட்டத்தில் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.9250 பெறலாம்.  

சம்பாதித்த பணத்திற்கு ஏற்ற வட்டி விகிதத்துடன் ஒவ்வொரு மாதமும் பணத்தைப் பெற எந்தத் திட்டம், எந்த வங்கி சிறந்தது என்று யோசிக்கிறீர்களா? அதிக வட்டி பெறுவதோடு, அதேபோல் நம்பகமான இடத்தைத் தேடுகிறீர்களா? அப்படியானால், வங்கிகளை விட அதிக வட்டி கிடைக்கும் இடம் அஞ்சலகம் மட்டுமே.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சில நிறுவனங்கள் அதிக வட்டியை வழங்கினாலும், அவற்றில் முதலீடு செய்வது ஆபத்தானது. மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் எப்போது இடத்தை காலி செய்துவிட்டுச் செல்கின்றன என்பதை கணிப்பது கடினம். எனவே, உங்கள் பணம் முழுமையாக பாதுகாப்பாக இருக்க வேண்டும், அதே நேரத்தில் அதிக வட்டி கிடைக்க வேண்டும் என்றால், அஞ்சலகத்தை விட வேறு இடமில்லை. கடந்த சில ஆண்டுகளாக அஞ்சலகம் வங்கியாக செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் சொந்த இடங்களில் அஞ்சல் வசதிகளைப் பெற முடிவதால், இதுவும் மக்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

மத்திய அரசு ஏற்கனவே அஞ்சலகத்தில் பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. உங்களுக்குத் தேவையான திட்டம் குறித்து அஞ்சலகத்திற்குச் சென்று தகவல்களைப் பெறலாம். குழந்தைகள், மூத்த குடிமக்கள், பெண்களுக்கு என்று பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் ஏற்கனவே அமலில் உள்ளன. இங்கே சொல்ல வந்திருப்பது அஞ்சலக மாத வருமானத் திட்டம் (Post Office Monthly Income Scheme) பற்றி. கடந்த ஆண்டு அதாவது 2023 பட்ஜெட்டில் இது குறித்து அறிவிக்கப்பட்டிருந்தாலும், இது குறித்து பலருக்குத் தெரியவில்லை. மாதந்தோறும் ஒரு தொகை பணம் வர வேண்டும் என்ற எண்ணம் உங்களிடம் இருந்தால், நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 வரை பணத்தைப் பெற இது வாய்ப்பளிக்கிறது. 

இதுவரை அஞ்சலக மாத வருமானத் திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் அதிகபட்சமாக ரூ.4.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். ஆனால் இப்போது இந்த வரம்பு ரூ.9 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதால், அதிக மாத லாபம் பெற முடியும். ஒரு குடும்ப உறுப்பினர் மட்டும் விரும்பினால், ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம், கூட்டாக இருந்தால் ரூ.15 லட்சம் வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரை (கூட்டாக இருந்தால்) முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளது. தற்போதைய வட்டி விகிதம் 7.4% ஆகும். வட்டி ஒவ்வொரு மாத இறுதியிலும் உங்களுக்குக் கிடைக்கும். ஒவ்வொரு மாத வட்டியையும் அப்படியே வைத்து ஒன்றாக எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்தால், நீங்கள் அவ்வாறு செய்யலாம். ஆனால் கூடுதல் வட்டி லாபம் உங்களுக்குக் கிடைக்காது. இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு ஐந்து ஆண்டுகளுக்கு. திட்டம் தொடங்கிய முதல் ஆண்டு உங்கள் முதலீட்டுத் தொகையை எடுக்க உங்களுக்கு அனுமதி இல்லை. மூன்று ஆண்டுகளுக்குள் அதாவது ஒரு வருடத்திலிருந்து 3 வருடங்களுக்குள் டெபாசிட்டை நீங்கள் திரும்பப் பெற்றால், மொத்த அசல் தொகையில் 2% அபராதம் விதிக்கப்படும். 3-5 ஆண்டுகளுக்குள் மொத்த அசல் தொகையில் 1% அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். 

டெபாசிட்டாளர் முதிர்வு காலத்திற்கு முன்பே இறந்துவிட்டால், கணக்கு மூடப்பட்டு, நாமினிக்கு அசல் முதலீட்டுத் தொகை மற்றும் வட்டி வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ், நீங்கள் ரூ.9 லட்சம் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.5,550 கிடைக்கும். கூட்டு கணக்கில் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால், ரூ.9,250 வட்டி லாபம் கிடைக்கும். இதன் வட்டி விகிதம் இப்படித்தான் இருக்கு.