கால்வாயில் 1 கோடி ரூபாய் கட்டு கட்டாக பணம்.....!!! பொதுமக்கள் தள்ளு முள்ளு....!!!
கால்வாயில் 1 கோடி ரூபாய் கட்டு கட்டாக பணம்.....!!! பொதுமக்கள் தள்ளு முள்ளு....!!!
விசாகப்பட்டினம் மதுரவாடா கிராமத்தில், உள்ள கழிவு நீர் கால்வாயில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் கட்டு கட்டாக இருந்துள்ளது. குப்பை வாரும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர், இதை கண்டு ஆச்சர்யபட்டுள்ளார்.
சந்தோஷத்தில் துள்ளி குதித்த இவர் கூச்சல் போட , அருகில் இருந்த பலரும் ஓடி வந்துள்ளனர்.
எனக்கு உனக்கு என பொதுமக்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு, இந்த விஷியம் போலீசார் காதில் விழ , விரைந்து வந்தவர்கள், வந்த வேகத்திலேயே அங்கிருந்தவர்களிடம் இருந்த , அந்த பணத்தை பறித்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் அந்த பணத்தை சோதனை செய்து பார்த்த போது , அவை அனைத்தும் கள்ள நோட்டுகள் என்பது தெரிய வந்தது.
மொத்த பணத்தின் மதிப்பு, ஒரு கோடியே பத்தாயிரம் ரூபாய் ஆகும். இவை அனைத்தும் பழைய ஐநூறு ரூபாய் கள்ள நோட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.....
இந்த செய்தி தீயாய் பரவி வருகிறது ...........