Asianet News TamilAsianet News Tamil

கால்வாயில் 1  கோடி ரூபாய்  கட்டு கட்டாக  பணம்.....!!! பொதுமக்கள் தள்ளு  முள்ளு....!!!

old 500-rs-note
Author
First Published Dec 1, 2016, 12:44 PM IST


கால்வாயில் 1  கோடி ரூபாய்  கட்டு கட்டாக  பணம்.....!!! பொதுமக்கள் தள்ளு  முள்ளு....!!!

விசாகப்பட்டினம் மதுரவாடா கிராமத்தில், உள்ள  கழிவு  நீர் கால்வாயில்  சுமார் 1  கோடி  ரூபாய்  மதிப்புள்ள ஐநூறு  ரூபாய்  நோட்டுக்கள்  கட்டு கட்டாக இருந்துள்ளது. குப்பை வாரும்  பணியில்  ஈடுபட்டிருந்த  ஒருவர், இதை கண்டு ஆச்சர்யபட்டுள்ளார்.

சந்தோஷத்தில்  துள்ளி  குதித்த  இவர் கூச்சல் போட , அருகில் இருந்த  பலரும்  ஓடி  வந்துள்ளனர்.

எனக்கு உனக்கு என  பொதுமக்களிடையே  தள்ளு முள்ளு ஏற்பட்டு,   இந்த விஷியம் போலீசார்  காதில் விழ , விரைந்து வந்தவர்கள், வந்த வேகத்திலேயே  அங்கிருந்தவர்களிடம் இருந்த , அந்த  பணத்தை  பறித்து  விசாரணை  மேற்கொண்டனர்.

பின்னர்  அந்த  பணத்தை சோதனை செய்து பார்த்த போது , அவை அனைத்தும்  கள்ள நோட்டுகள் என்பது தெரிய வந்தது.

மொத்த பணத்தின் மதிப்பு,  ஒரு  கோடியே பத்தாயிரம்  ரூபாய்  ஆகும்.  இவை அனைத்தும்  பழைய ஐநூறு  ரூபாய்  கள்ள நோட்டுகள் என்பது  குறிப்பிடத்தக்கது.....

 இந்த  செய்தி  தீயாய் பரவி வருகிறது ...........
 

Follow Us:
Download App:
  • android
  • ios