விரைவில் 10 ரூபாய் பிளாஸ்டிக் கரன்சி ......!! பணப்புழக்கத்தை அதிகரிக்க மத்திய அரசு அதிரடி ....!!!
விரைவில் 10 ரூபாய் பிளாஸ்டிக் கரன்சி ......!! பணப்புழக்கத்தை அதிகரிக்க மத்திய அரசு அதிரடி ....!!!
ரூபாய் நோட்டு தட்டுப்பாடுகளை போக்க , விரைவில் பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகளை வெளியிட உள்ளதாக மக்களவையில் தெரிவிக்கபட்டுள்ளது.
பழைய 500 மற்றும் 1000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்பு, தற்போது போதிய சில்லறை கிடைக்கப்பெறமால் , மக்கள் அவதி பட்டு வருவதை பார்க்க முடிகிறது.
இதனை தொடர்ந்து தற்போது, ரூபாய் நோட்டு புழக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு , புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டை வெளியிட போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான கேள்விக்கு, மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மெஹ்வால், மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ‘‘பிளாஸ்டிக் அல்லது பாலிமரில் ரூபாய் நோட்டு அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான மூலப்பொருட்களை வாங்கும் திட்டத்தில் தற்போது செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
பிளாஸ்டிக் கரன்சி தயாரிக்க வேண்டும் என்பதில், ஏற்கனவே ரிசர்வ் வங்கி திட்டமிட்டு இருந்ததாக தெரிகிறது.
இது குறித்து கடந்த 2014 ஆம் ஆண்டே , நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஒரு வேளை இந்த பிளாஸ்டிக் கரன்சி வெளிவந்தால் அதன் ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பிளாஸ்டிக் கரன்சி நோட்டு போன்று கள்ள நோட்டு அடிக்க முடியாது என்பது கூடுதல் தகவல்