மஹசூஸ் டிராவில் வெற்றி பெற்ற தமிழகத்தை சேர்ந்த ஜோதிகுமார் என்பவர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார். 

மஹசூஸ் டிராவில் வெற்றி பெற்ற தமிழகத்தை சேர்ந்த ஜோதிகுமார் என்பவர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மஹசூஸ் டிராவின் இந்த வாரத்திற்கான போட்டியில் www.mahzooz.ae என்ற இணையதளத்தில் AED 35 செலுத்தி பதிவு செய்து போட்டியாளர்கள் விளையாடினர்.

இந்த வாரத்திற்கான மஹசூஸ் டிரா வரும் சனிக்கிழமை (பிப்ரவரி 5) அமீரக நேரப்படி இரவு 9 மணிக்கு நடக்கிறது. வெற்றியாளர் AED 10,000,000 ஜெயிக்கலாம்.

கடந்த டிராவில் தமிழகத்தில் கன்னியாகுமரியை சேர்ந்த ஜோதி குமார் என்பவர் பரிசு வென்றார். ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 12 ஆண்டுகளாக வசித்துவரும் ஜோதி குமாருக்கு வயது 51. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கு முன்பாக சிங்கப்பூரில் வசித்துவந்த ஜோதி குமார், அங்கு லோட்டோ லைவ் டிராவில் விளையாடியிருக்கிறார். அதே அனுபவத்தில் அமீரகத்தில் மஹசூஸ் லைவ் டிராவில் கலந்துகொண்டு பரிசுத்தொகையை வென்றுள்ளார்.

ஒவ்வொரு வாரமும் நடக்கும் இந்த மஹசூஸ் லைவ் டிரா பல பேருடைய வாழ்க்கையையே மாற்றியுள்ளது. அந்தவகையில், தமிழகத்தை சேர்ந்த அமீரகத்தில் வசிக்கும் ஜோதி குமாரும் பரிசு வென்றுள்ளார்.

மஹசூஸ் லைவ் டிரா வெற்றியாளரான ஜோதி குமார், ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மஹசூஸில் பரிசுத்தொகையை வென்றதாக அறிந்தபோது அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியடைந்தேன். என் குடும்பமும் மகிழ்ச்சியடைந்தது. இதை கடவுள் கொடுத்த பரிசாகத்தான் பார்க்கிறேன். இந்த வெற்றி பெற்ற தொகையை, எனக்கு தெரிந்து கஷ்டப்படுபவர்களுக்கு உதவுவதற்கு பயன்படுத்துவேன். ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளின் படிப்பு செலவுக்கு உதவுவேன் என்றார் ஜோதி குமார்.