ஜியோ புலியாக பாய்கிறது.....!!! பார்தி ஏர்டெல் பூனையாக பதுங்குகிறது....!!!
ஜியோ வின் சலுகையை பார்த்து மிரண்டுபோன பல தொலைத் தொடர்பு நிறுவனங்கள் , தங்களது கட்டணத்தை குறைக்க ஆரம்பித்தது.
இந்நிலையில், ஜியோவின் அன்லிமிடெட் ஆபர் வரும் டிசம்பர் மாதத்துடன் முடியும் என எதிர்பார்க்கும் தருணத்தில், அதில் ஏதாவது மாற்றம் உள்ளதா என்பதை பொருத்து, சந்தையில் போட்டியை சமாளிக்கும் விதமாக பாரதி ஏர்டெல் முடிவெடுக்கும் என பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசிய தலைமைச் செயல் அதிகாரி கோபால் விட்டல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கட்டணக் குறைப்புக்கு வாய்ப்பிருப்பதாகவும் அதே சமயத்தில், இலவச சேவை களை வழங்கும் எண்ணமில்லை என்றும் தெரிவித்துள்ளது பார்தி ஏர்டெல்..!!
இந்நிலையில், பார்தி ஏர்டெல் ஏற்கெனவே அன்லிமிடெட் இலவச குரல் வழி சேவையை (ரூ.999க்கு) அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ,,,,, ஜியோ புலியாக பாய்கிறது,,,,,பாரதி ஏர்டெல் பூனையாக பதுங்குகிறது....!!!
