அனைவருக்கும் கிரெடிட் கார்டு....!!! 25,000 வரை செலவு பண்ணிகோங்க.........!!!
அனைவருக்கும் கிரெடிட் கார்டு....!!! 25,000 வரை செலவு பண்ணிகோங்க.........!!!
பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை மிக விரைவில் அமல்படுத்தும் விதமாக தற்போது எஸ் பி யை இறங்கியுள்ளது.
அதாவது பொதுமக்களின் பண பரிவர்த்தனையை சுலபமாக்கும் பொருட்டு , தற்போது நடுத்தர மக்களும் கிரடிட் கார்ட் பயன்படுத்த வழி வகை செய்ய திட்டமிட்டுள்ளது எஸ் பி ஐ..
பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து தற்போது மக்களிடையே பணப்புழக்கம் வெகுவாக குறைந்துள்ளது. கையில் இருந்த பணத்தை எல்லாம் , மக்கள் வங்கி கணக்கில் வைத்துள்ளனர்.
இந்நிலையில், அவர்களின் வங்கியில் டெபாசிட் செய்துள்ள பணத்தின் அளவை பொருத்து, தகுதியான மக்களுக்கு கிரெடிட் கார்ட் வழங்க எஸ் பி ஐ முடிவு செய்துள்ளது.
மேலும் இது குறித்து தெரிவித்த எஸ்பிஐ கார்டு தலைமைச் செயல் அதிகாரி விஜய் ஜசூஜா ,
இந்த கிரெடிட் பெற, பெரிய ஷாப்பிங் மால்கள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் இதற்காகவே , தற்காலிக ஊழியர்களை நியமித்து , இந்த பணியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
இந்த கிரெடிட் கார்டு வெறும் மூன்று நாட்களில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி 25, 000 வரை செலவு செய்ய முடியும் குறிப்பிடத்தக்கது.
மிக விரைவில் இந்த திட்டம் செயல்படுத்த படும் என எதிர்பார்க்கப்படுகிறது.....