சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று அதிகரித்துள்ளது. உலக முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதி முதலீடு செய்வதே விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.
ஆபரணத்தங்கத்தின் விலை உயர்வு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. அதேபோல் வெள்ளி விலை 200 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது. மழையால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரித்துள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தட்டு மக்களுக்கு இது மேலும் ஒரு சிரமத்தை கொடுத்துள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 12 ஆயிரத்து 60 ரூபாயாக உள்ளது. அதேபோல் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 160 ரூபாய் அதிகரித்து 96,480 ரூபாயாக உள்ளது. உலக முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை, வைர நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். 1 கிராம் வெள்ளி 201ரூபாய்க்கும் 1 கிலோ பார்வெள்ளி 2 லட்சத்து ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்துள்ளது.
அதேபோல் மதுரை, கோவை, தூத்துக்குடி, திருச்சி ஆகிய நகரங்களில் ஆபரணத்தங்கத்தின் விலை 11 ஆயிரத்து 60 ரூபாயாக உள்ளது. தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுவதால் விலை அதிகரித்தாலும் தங்கத்தில் முதலீடு செய்வதை நடுத்தர வர்க்கத்தினர் வாடிக்கையாக கொண்டிருப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விலை ரீடைல் சந்தையிலும் எதிரொலிக்கும் என்பதால் தங்கத்தை வாங்குவோர் திட்டமிட்டு வாங்குவது அவசியம்.
இந்த விலை ரீடைல் சந்தையிலும் எதிரொலிக்கும் என்பதால் தங்கத்தை வாங்குவோர் திட்டமிட்டு வாங்குவது அவசியம். டிசம்பர் மாதம் தொடக்கம் அமெரிக்காவில் அதீத கடன் மற்றும் நிதி பற்றாக்குறை அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் சிக்கலாக மாறும் என முதலீட்டாளர்கள் நம்புவதாலும் தங்கம் மீதான முதலீட்டு அதிகரிக்க வழிவகுத்துள்ளது. இதனால் அடித்தட்டு மக்கள் கொஞ்சம் காத்திருந்து தங்கத்தில் முதலீடு செய்யலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


