மாலை நேரத்தில் மயக்கம் வரும் அளவிற்கு தங்கம் விலை உயர்வு...!
ஒரு கிராம் தங்கம் 5 ரூபாய் உயர்ந்து 3690.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதன்படி சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மாலை நேரத்தில் மயக்கம் வரும் அளவிற்கு தங்கம் விலை உயர்வு...!
தொடர் ஏறுமுகத்தில் இருக்கும் தங்கம் விலை இன்றும் உயர்ந்து உள்ளது. கடந்த ஒரு மாத காலமாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.
அந்த வகையில் ஒரு சவரன் தங்கம் இன்றைய நிலவரப்படி, 30 ஆயிரத்தை நெருங்கும் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் பெரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இருந்த போதிலும் பல்வேறு சுப காரியங்களுக்கு தங்கம் வாங்க வேண்டியது அவசியம் என்பதால் வேறு வழியின்றி தங்கத்தை வாங்கி செல்கின்றனர் மக்கள்.
இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி,
ஒரு கிராம் தங்கம் 5 ரூபாய் உயர்ந்து 3690.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதன்படி சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மாலை நேர நிலவரப்படி,
கிராமுக்கு 22 ரூபாய் அதிகரித்து 3713.00 ரூபாயாகவும், சவரன் ரூ 29 ஆயிரத்து 704 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்
கிராமுக்கு 60 பைசா உயர்ந்து 51.90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது