பிளிப்கார்ட் தலைமை நிதி அதிகாரி திடீர் ராஜினாமா.....!!!
பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான, பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சஞ்சய் பவேஜா , அவரது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அதாவது, கடந்த வருடம் முதலே பிளிப்கார்ட் நிறுவனத்தில் பணிபுரியும் உள்ள சில முக்கிய புள்ளிகளை தொடர்ந்து வெளியேற்றி வந்தது.இந்நிலையில் தற்போது, பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பதவியில் இருந்த சஞ்சய் பவேஜா ராஜினாமா செய்திருக்கிறார்.
இவரது பதவி காலம் முடிய , இன்னும் இரண்டு மாத காலம் உள்ளது. அதாவது, வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை இந்த பதவியில் தொடருவார் என்று தெரிகிறது.
இதற்கு முன்னதாக, பிளிப் கார்ட் நிறுவனத்தில் வர்த்தக பிரிவு தலைவர் முகேஷ் பன்சால், தலைமை தொழில் அலுவலர் அங்கித் நகோரி, மாதம் தலைமை புராடக்ட் அலுவலர் புனித் சோனி உள்ளிட்டோர் , கடந்த பிப்ரவரியில் அவர்களது பதவியை ராஜினமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
