பிப்ரவரி 3-ம் தேதி தொடங்குகிறது BSE வர்த்தகம் .....!

பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் எனப்படும் BSE, வரும் பிப்ரவரி 3-ம் தேதி, தன்னுடைய வர்த்தகத்தை தொடங்குகிறது. அதன்படி, இந்த நிறுவனத்தின் ஐபிஓ கடந்த 23 முதல் 25-ம் தேதி வரை நடந்தது.

பங்கின் விலை :

நிறுவனத்தின் ஐபிஓ கடந்த 23 முதல் 25-ம் தேதி வரை நடந்தது.இதில் வெளியிடப்பட்ட ஒரு பங்கின் விலை, ரூ.805 - 806 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ரூ.1,243 கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதற்காக இதுவரை 51 மடங்கு அளவுக்கு விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ஐபிஓ:

2016-ம் ஆண்டில் மட்டும், 26 நிறுவனங்களின் ஐபிஓ வெளியானது. இதன் மூலம் ரூ.26,000 கோடி அளவுக்கு நிதி திரட்டப்பட்டன. இந்நிலையில், பிஎஸ்இ-யின் போட்டி நிறுவனமான என்எஸ்இயும், பொதுப்பங்கு வெளியிடுவதற்காக செபியிடம் கோரியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

10 ஆவது இடத்தில் பிஎஸ்இ :

சர்வதேச அளவில், பிஎஸ்இ பத்தாவது இடத்தில உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.1,13,87,346 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.