பணவீக்கத்தை மேலும் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இன்று மக்களவையில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சாமானிய மக்களின் நலனுக்காக பணவீக்கத்தை மேலும் குறைப்போம். சில்லறை பணவீக்கம் முந்தைய மாதத்தில் 6.77 சதவீதத்தில் இருந்து நவம்பர் மாதத்தில் 11 மாதங்களில் இல்லாத அளவிற்கு 5.8 சதவீதமாக குறைந்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க..ஜனவரி 4ம் தேதி பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு !

குறைந்த பணவீக்கத்துடன் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இருப்பதால், தேக்கநிலை குறித்து அச்சம் இல்லை. நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4 சதவீத நிதிப் பற்றாக்குறை இலக்கை அரசு எட்ட முடியும். பிரதமர் மோடி அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகளால் 2022 மார்ச் இறுதியில் செயல்படாத சொத்துக்கள் (NPAs) 7.28 சதவீதமாக வெகுவாகக் குறையும்.

இதையும் படிங்க..அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாடலாம்.. உதயநிதி ஸ்டாலின் நடிக்க கூடாதா ? விஷால் கொடுத்த பதிலடி !

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதைப் பொறுத்தவரை, உள்நாட்டு அலகு மற்ற அனைத்து நாணயங்களுக்கு எதிராகவும் அதிகரித்து வருவதாகவும், மற்ற நாணயங்களுடன் ஒப்பிடும்போது கிரீன்பேக்கிற்கு எதிரான வீழ்ச்சி குறைவாக உள்ளது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க..நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்... நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.. அன்புமணி ராமதாஸ் ஆவேசம்