ஈரான் பிரச்சனையால் பீர் விலை உயர்த்தப் போகிறது. பெட்ரோல், கேஸ் விலை ஏறியதால், பீர் தயாரிப்பு, விநியோகம் மற்றும் பப்களை நடத்துவதற்கான செலவுகள் அதிகரித்துள்ளன. இதனால், பப் உரிமையாளர்கள் அதிக கட்டணம் வசூலிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

ஈரான்ல நடக்குற போர் பதற்றம், இப்போ பிரிட்டன்ல இருக்குற பீர் பிரியர்களோட பாக்கெட்டை பதம் பார்க்கப் போகுது. அதேபோல் ஆசியா ஐரோப்பிய கண்டங்களில் போர் சூழல் காரணமா எரிபொருள் விலை ஏறியிருப்பதால், பப்களில் பீர் விலை சீக்கிரமே உயரும்னு செய்திகள் வருது. சர்வதேச சந்தையில பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 103 டாலரா அதிகரிச்சிருக்கு. ஹார்முஸ் ஜலசந்தி வழியா சரக்கு போக்குவரத்து தடைபட்டதும், எரிசக்தி நிலையங்கள் மேல நடக்குற தாக்குதல்களும்தான் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம். ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் கேஸ் விலை பயங்கரமா ஏறியிருக்கு.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

எல்லா பக்கமும் அடி

இந்த எரிசக்தி நெருக்கடி, பீர் தயாரிப்பையும் விநியோகத்தையும் நேரடியா பாதிக்கும். முக்கியமா மூணு வழிகள்ல இந்த விலை உயர்வு பப்களை தாக்குது.

1. பீர் தயாரிக்கவும், அதை குளிர்ச்சியா வெச்சிருக்கவும் அதிக அளவு கரண்ட் மற்றும் கேஸ் தேவை. இப்போ இதோட செலவு பல மடங்கு அதிகரிச்சிருச்சு.

2. பெட்ரோல், டீசல் விலை ஏறுனதால, பப்களுக்கு பீர் கொண்டு வர்றதுக்கான போக்குவரத்து செலவும் அதிகமாகிடுச்சு.

3. பப்கள்ல லைட்டிங், ஹீட்டிங், ஃபிரிட்ஜ் போன்றவற்றை இயக்குவதற்கான செலவு அதிகரிப்பது உரிமையாளர்களுக்கு பெரிய தலைவலியா இருக்கு.

இன்னும் சில வாரங்கள்லயே பீர் விலையில இந்த மாற்றம் தெரிய ஆரம்பிக்கும். பெரிய லாபம் இல்லாம இயங்குற பப்களால இந்த கூடுதல் செலவை தாங்க முடியாது. அதனால, வாடிக்கையாளர்கள்கிட்ட இருந்து அதிக பணம் வசூலிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அவங்க தள்ளப்படுவாங்க.

சின்ன பப்களுக்கு சங்கடம்

பெரிய கம்பெனிகள் ஒப்பந்தங்கள் மூலமா ஒரு அளவுக்கு இந்தச் சூழலை சமாளிக்க முடியும். ஆனா, தனியா இயங்குற சின்ன பப்களையும், உள்ளூர் பீர் தயாரிப்பாளர்களையும் இந்த நெருக்கடி கடுமையா பாதிக்கும். ஏற்கெனவே குறைஞ்ச லாபத்துல இயங்கிட்டு வர்ற இவங்கள்ல பலர், தங்களோட பப்களை மூட வேண்டிய நிலைமை கூட வரலாம்னு சொல்லப்படுது. இது மும்பை, டெல்லி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறிய பார்களையும் பப்களையும் வெகுவாக பாதித்துள்ளது.