Today Rasi Palan : செப்டம்பர் 23, 2325 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

பொதுவான பலன்கள்:

மகர ராசி நேயர்களே இன்று உங்கள் பொறுமைக்கும், கடின உழைப்புக்குமான பலன்கள் கிடைக்கும். நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். நாள் முழுவதும் உற்சாகத்துடன் இருப்பீர்கள். புதிய திட்டங்கள் குறித்து சிந்திப்பதற்கும், எதிர்காலம் குறித்த முடிவுகளை எடுப்பதற்கும் இது ஒரு சிறந்த நாளாகும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நிதி நிலைமை:

இன்று உங்கள் எண்ணங்கள் தெளிவாக இருக்கும். எந்த ஒரு செயலையும் திறம்பட திட்டமிட்டு முடிப்பீர்கள். பணவரவு சீராக இருக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு இல்லை. பணத்தை முதலீடு செய்வது குறித்து சிந்திப்பீர்கள். தங்கம், நிலம் போன்ற பெரிய முதலீடுகளில் முதலீடு செய்வீர்கள். அதற்கு முன்னர் அனுபவமிக்கவர்களின் ஆலோசனையைப் பெறுங்கள். கடன் கொடுக்கவோ, வாங்குவதற்கோ உகந்த நாள் அல்ல.

தனிப்பட்ட வாழ்க்கை:

காதல் வாழ்க்கையில் இனிமையான தருணங்கள் உண்டாகும். உங்கள் துணையுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதால் உங்கள் மீதான மதிப்பும், அன்பும் அதிகரிக்கும். திருமணமானவர்கள் உங்கள் துணையின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பது உறவை பலப்படுத்தும். குடும்பத்தில் இருப்பவரிடம் பேசும் பொழுது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். சிறு தவறான புரிதல் கூட பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும்.

பரிகாரங்கள்:

இன்று உங்களுக்கு நாள் நல்லபடியாக அமைவதற்கு சிவாலயங்களுக்கு சென்று வழிபடுங்கள். சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யுங்கள். சிவாலயங்களில் இருக்கும் நந்தியம் பெருமானை வழிபடுங்கள். ஏழை எளியவர்களுக்கு ஒரு வேலை உணவு வாங்கி கொடுங்கள்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.