Meena Rasi This Week Rasi Palan: டிசம்பர் 29 முதல் ஜனவரி 04 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மீன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

இந்த வார ராசிப்பலன்கள் - மீனம்

மீன ராசி நேயர்களே, இந்த வாரம் சனி பகவானின் நிலை காரணமாக சோம்பல் நிலவலாம். ஆனால் குருவின் பார்வையால் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். உறவினர்களிடமிருந்து நல்ல செய்திகள் வரலாம். சுப காரியங்களுக்கான முயற்சிகள் கை கூடும். நீண்ட நாள் தடைபட்ட காரியங்கள் குருவின் அருளால் வேகமெடுக்கும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நிதி நிலைமை:

வாரத்தின் முற்பகுதியில் எதிர்பாராத பண வரவு இருக்கும். பழைய கடன்கள் வசூலாகும். ராகு பகவான் நிலை காரணமாக தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். செலவுகளை திட்டமிடுவது நல்லது. சேமிப்பு பழக்கத்தை இந்த வாரத்தில் இருந்து வலுப்படுத்துவீர்கள். நீண்ட கால முதலீடுகளில் நிதானம் தேவை. முதலீடுகளை செய்வதற்கு முன்னர் நிபுணர்களின் ஆலோசனை அவசியம்.

ஆரோக்கியம்:

சனி பகவானின் ஆதிக்கத்தால் கால்கள் மற்றும் மூட்டுகளில் வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. மன அழுத்தம் மற்றும் தூக்க பிரச்சனை வரலாம். உணவுக் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். குறிப்பாக துரித உணவுகளை தவிர்க்கவும். பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது என்றாலும், சிறிய உபாதைகளுக்கும் உடனடியாக சிகிச்சை பெறுவது நல்லது.

கல்வி:

குருவின் அருளால் மாணவர்களுக்கு இது பொற்காலமாக அமையும். குருவின் பலத்தால் கவனிக்கும் திறன் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். வெளிநாடு சென்று கல்வி பயில விரும்புவர்களுக்கு வாரத்தில் நல்ல தகவல்கள் கிடைக்கும். ஆசிரியர்கள் மற்றும் பெரியோர்களின் வழிகாட்டுதல் உங்களுக்கு பலமாக இருக்கும்.

தொழில் மற்றும் வியாபாரம்:

வேலையில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். உயர் அதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த இடமாற்றம் அல்லது பதவி உயர்வு கிடைக்கலாம். சுய தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டாளிகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற பலன்கள் கிடைக்கும்.

குடும்ப உறவுகள்:

கணவன் மனைவிக்கு இடையே அன்னோன்யம் அதிகரிக்கும். ஒருவர் ஒருவர் புரிந்து கொள்வது மகிழ்ச்சியைத் தரும். குழந்தைகள் மூலம் குடும்பத்திற்கு பெருமை சேரும். தந்தை வழி உறவுகளுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி, இணக்கம் உண்டாகும். வீட்டில் சுப நிகழ்ச்சிக்கான பேச்சு வார்த்தைகள் நடக்கும்.

பரிகாரம்:

உங்கள் குலதெய்வத்தை மனதார வழிபடுவது நல்லது. மாலை வேளையில் வீட்டில் விளக்கேற்றி குலதெய்வத்தை நினைத்து வழிபடுங்கள் அல்லது இஷ்ட தெய்வத்தை வழிபடுங்கள். இயலாதவர்களுக்கு அன்னதானம் செய்வது அல்லது உடைதானம் செய்வது பலன்களை அதிகரிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)