போதையில் நண்பனை கிணற்றில் தள்ளி கொடூரமாக கொலை செய்த அதிர்ச்சி வீடியோ!

Oct 1, 2018, 1:57 PM IST

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள சாமந்திகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் தச்சுத்தொழிலாளி நவீன் இவர் தனது நண்பர்கள் சுதர்சன், பவித்ரன், ராகுல், கல்யாண்குமார், அருண்குமார், அஜீத்குமார் ஆகியோருடன் அருகிலுள்ள ஒரு தேங்காய் தோப்பில் நேற்று மாலை மது குடித்துள்ளனர் மது போதை அதிகமானதால் நவீன்குமார் என்பவரை மற்ற 6 பேரும் கிணற்றில் தள்ளிவிட்டு சென்றுள்ளனர் நவீன் வீட்டிற்கு வராததால் வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் அவனின் தந்தை மகேந்திரன் புகார் அளித்தார் இதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தேங்காய் தோப்பில் கிணற்றில் அவனின் நண்பர்களே தள்ளிவிட்டது தெரியவந்தது.

இதன் அடிப்படையில் நவீனை கிணற்றிலிருந்து பிணமாக காவல்துறையினர் மீட்டனர் பிரேதபரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதுபோதையில் நண்பர்கள் சக நண்பனை கிணற்றில் தள்ளி கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.