பெட்ரோல் நிரப்பப்பட்ட லாரியில் தீ..! எந்த நேரத்திலும் வெடிக்கும் அபாயம்.!?

First Published May 5, 2018, 6:33 PM IST
Highlights
petrol tanker caught fire in krishnagiri


ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் எரிவாயு ஏற்றி வந்த லாரி நடுவழியில் திடிரென தீ பற்றி எரிந்தது. இதனை  தொடர்ந்து,  பின்னல் வரும் வாகனங்கள் சாலையை  கடக்க முடியாமல் சுமார் 10  கிலோ  மீட்டர் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

மேலும் தீயணைப்பு வீரர்கள், துரிதமாக செயல்பட்டு தீயை அணைக்கும் பணியை செய்து வருகிறார்கள். ஆனாலும் வாகனம் அருகே செல்ல  முடியாதபடி தொடர்ந்து எரிந்து வருகிறது.

மேலும், அந்த லாரியில் பெட்ரோல் நிரப்பப்பட்டு வந்ததாக தெரிகிறது. எனவே பெட்ரோல் தீரும் வரை எரிய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இன்னொரு பக்கம் எந்த நேரத்திலும் வெடிக்கும் அபாயம் இருபதாகவும் கூறப் படுகிறது .

லாரி ஓட்டுனர் மற்றும் உதவியாளர் இருவரும் தீப்பிடித்த அடுத்த நொடியே லாரியை விட்டு இறங்கி  உள்ளனர். எனவே  யாருக்கும் எந்த காயமும் ஏற்பட வில்லை. 

click me!