Sep 28, 2018, 5:40 PM IST
தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை காயத்திரி. இவர் அவருடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில், தன்னை பிரபல மூத்த மூத்த பத்திரிக்கையாளர், பிரகாஷ் எம்.சுவாமி தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும், இதனை நான் முறையாக காவல் நிலையம் சென்று புகார் கொடுத்த போதும் அவர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை என கண்ணீர் விட்டு கதறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.