பகல் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில்... மாலையில் நல்ல மழை... பொதுமக்கள் மகிழ்ச்சி!!

Sep 25, 2022, 11:16 PM IST

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் நாளை முதல் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மதுரையில் மாலை முதல் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் தென் மாவட்டங்களில் நாளை முதல் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று மாலை மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென பரவலாக மழை பெய்தது. கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக பகலில் சுட்டெரிக்கும் வெயிலால் பாதசாரிகள் கடும் அவதி உற்று வந்த நிலையில் இன்று மாலை பரவலாக பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது மாவட்டம் முழுவதும் பெய்த  மழையால் நிலம் குளிர்ந்தது போல மக்களின் மனங்களும் குளிர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.