அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரத்தில் மிக வேகமாக வளரும் நாடாக இருக்கும்… பொருளாதார வர்ணனையாளர் உறுதி!!

Jan 20, 2023, 12:03 AM IST

அடுத்த 10-20 ஆண்டுகளில், பொருளாதாரத்தில் மிகவும் வேகமாக வளரும் நாடாக இந்தியா இருக்கும் என உலக பொருளாதார அமைப்பில் பைனான்சியல் டைம்ஸ் தலைமை பொருளாதார வர்ணனையாளர் மார்ட்டின் வுல்ஃப் தெரிவித்துள்ளார். டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தின் அமர்வு ஒன்றில் பேசிய அவர், அடுத்த 10-20 ஆண்டுகளில், பொருளாதாரத்தில் மிகவும் வேகமாக வளரும் நாடாக இந்தியா இருக்கும்.

இதையும் படிங்க: நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் ராஜினமா செய்வதாக திடீர் அறிவிப்பு:பின்னணி என்ன?

70களில் இருந்து எவ்வளவு நீண்ட காலமாக இந்தியாவை நான் பின்தொடர்கிறேன் என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. உலக வங்கியின் மூத்த பொருளாதார நிபுணர் துருவ் சர்மா கருத்துப்படி, முந்தைய டிசம்பரில், உலக வங்கி இந்தியாவின் 2022-23 ஜிடிபி வளர்ச்சியை வலுவான பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக 6.5 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாக மாற்றியமைத்தது. 

இதையும் படிங்க: உலக பொருளாதார மாநாட்டில் 'வைரல் குயின்' பிரஜக்தா கோலி!

10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இந்தியா தற்போது மிகவும் உறுதியாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும், இந்தியாவை வலுவாக வழிநடத்த உதவுகின்றன. கொரோனா தொற்று காலத்தில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியா வலுவாக மீண்டு வந்துள்ளது என்று தெரிவித்தார்.