Viral :  ஊர் கட்டுப்பாடு என பெயரில் சிறுவர்களுக்கு திண்பண்டங்களை வழங்க மறுத்த கடைக்காரர்!

Viral : ஊர் கட்டுப்பாடு என பெயரில் சிறுவர்களுக்கு திண்பண்டங்களை வழங்க மறுத்த கடைக்காரர்!

Published : Sep 17, 2022, 11:09 AM IST

தென்காசி, சங்கரன்கோவில் அருகிலுள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் ஆதிதிராவிட பள்ளி குழந்தைகளுக்கு ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் திண்பண்டங்களை வழங்க முடியாது எனக்கூறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிட பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்தப் பள்ளியில் அந்தப் பகுதியை சுற்றியுள்ள பல்வேறு சமூகத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் அந்த பள்ளியில் பயின்ற ஒரு சமூகத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் பாஞ்சாங்குளம் கிராமத்தில் உள்ள கடைக்கு சென்று தின்பண்டங்கள் வாங்க முற்படும்போது அந்த கடை உரிமையாளர் உங்களுக்கு தின்பண்டம் கொடுக்க முடியாது என்று ஊர் கூட்டம் போட்டு முடிவு செய்துள்ளார்கள். அதனால், கட்டுப்பாட்டு உள்ளது என்று தெரிவிக்கிறார்.

ஆனால் விவரம் தெரியாத அந்த ஒரு சிறுவன் கட்டுப்பாட்டு என்றால் என்ன என்று கேட்கின்றான் அதற்கு அவர் உங்கள் யாருக்கும் தின்பண்டம் கொடுக்கக் கூடாது என்று எங்க ஊர் சார்பில் கூட்டம் போட்டு முடிவு செய்துள்ளார்கள். அதனால் நீங்கள் யாரும் இங்கு வாங்க முடியாது என்றும் உங்கள் தாய் தந்தையரிடம் போய் இதை சொல்லுங்கள் என்றும் மாணவர்களை அனுப்பி வைக்கிறார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிறு மாணவர்கள் மத்தியில் ஜாதி உணர்வை தூண்டும் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் முகம் சுளிக்க வைத்திருக்கிறது
 

04:31விஜய்கு வெற்றி விநாயகர் பரிசளித்த வேட்பாளர்.. கோட்டையில் இனி தளபதி கச்சேரி...
02:18அரசியல் நாகரிகம் இல்லாமல் ஒருவர் இருப்பார் என்றால் அது எடப்பாடி தான் ! ஓ பன்னீர்செல்வம் பேச்சு
03:42சைக்கிளில் சென்ற தளபதி.! இளைஞர் அலையில் நகர்ந்து வந்த விஜய்.! மாஸ் காட்டிய விஜய்.!
03:31விஜயின் காரை மறித்து சோதனையிட்ட பறக்கும் படை.! திருப்பத்தூர் அருகே விஜய் கார் நிறுத்தம்!
04:53மற்றவர்களை திட்டி ஓட்டு வாங்க வேண்டும் என்ற அவசியம் எங்கள் கூட்டணிக்கு இல்லை ! பிரேமலதா அதிரடி
03:58சாரை சாரையாக பின்தொடர்ந்த இளைஞர் பட்டாளம்.! ரசிகர்களின் உற்சாகம்...
03:40மெட்ரோ ரயிலில் முதல்வர் ஸ்டாலினின் மாஸ் கேம்பெய்ன்! நடுத்தர மக்களின் நாடி பிடித்த முதல்வர்.!
03:52மக்கள் வெள்ளத்தில் மிதந்து சென்ற விஜய்.! சாரை சாரையாக பின்தொடர்ந்த இளைஞர் பட்டாளம்.!
03:49சுந்தர் சி-க்கு செம்ம நாலேஜ்… அவர பாத்து பிடிஆரே பயந்துட்டாரு .. புகழ்ந்து தள்ளிய குஷ்பூ
04:08தப்பான ஆட்சி நடக்கும் போது அப்பான்னு எப்படி கூப்புடுறது.! திமுகவை கிழித்து தொங்க விட்ட குஷ்பு.!
Read more