Viral :  ஊர் கட்டுப்பாடு என பெயரில் சிறுவர்களுக்கு திண்பண்டங்களை வழங்க மறுத்த கடைக்காரர்!

Viral : ஊர் கட்டுப்பாடு என பெயரில் சிறுவர்களுக்கு திண்பண்டங்களை வழங்க மறுத்த கடைக்காரர்!

Published : Sep 17, 2022, 11:09 AM IST

தென்காசி, சங்கரன்கோவில் அருகிலுள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் ஆதிதிராவிட பள்ளி குழந்தைகளுக்கு ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் திண்பண்டங்களை வழங்க முடியாது எனக்கூறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிட பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்தப் பள்ளியில் அந்தப் பகுதியை சுற்றியுள்ள பல்வேறு சமூகத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் அந்த பள்ளியில் பயின்ற ஒரு சமூகத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் பாஞ்சாங்குளம் கிராமத்தில் உள்ள கடைக்கு சென்று தின்பண்டங்கள் வாங்க முற்படும்போது அந்த கடை உரிமையாளர் உங்களுக்கு தின்பண்டம் கொடுக்க முடியாது என்று ஊர் கூட்டம் போட்டு முடிவு செய்துள்ளார்கள். அதனால், கட்டுப்பாட்டு உள்ளது என்று தெரிவிக்கிறார்.

ஆனால் விவரம் தெரியாத அந்த ஒரு சிறுவன் கட்டுப்பாட்டு என்றால் என்ன என்று கேட்கின்றான் அதற்கு அவர் உங்கள் யாருக்கும் தின்பண்டம் கொடுக்கக் கூடாது என்று எங்க ஊர் சார்பில் கூட்டம் போட்டு முடிவு செய்துள்ளார்கள். அதனால் நீங்கள் யாரும் இங்கு வாங்க முடியாது என்றும் உங்கள் தாய் தந்தையரிடம் போய் இதை சொல்லுங்கள் என்றும் மாணவர்களை அனுப்பி வைக்கிறார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிறு மாணவர்கள் மத்தியில் ஜாதி உணர்வை தூண்டும் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் முகம் சுளிக்க வைத்திருக்கிறது
 

04:25தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதே தேமுதிகவின் முதன்மை இலக்கு ! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!
05:10கடலூரில் இடி, மின்னலுடன் கொட்டித் தீர்த்த கனமழை: வெப்பம் தணிந்து குளுமையான காலநிலை!
05:25விவசாயிகளின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும் ! விவசாயிகளில் எச்சரிக்கை !
03:43காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் பிற கூட்டங்களில் பேச முடியாது - அமைச்சர் நிர்மல் குமார்
01:47திமுக அரசிற்கு சவால்: மூடப்பட்ட 717 மதுக்கடைகளின் கடை எண் மற்றும் விலாசம் வெளியீடு!
03:02அமைச்சர்கள் ரேஷன் அரிசி சாப்பிடுகிறார்களா? மேடையில் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பிய வீடியோ!
02:15சட்டப்பேரவையில் திமுகவினர் அநாகரிகமாக நடந்துகொள்வதை மக்கள் பார்க்க வேண்டும் ! நிர்மல் குமார் பேச்சு
02:47எல்லாம் Proof ஓட இருக்கு, OPEN பண்ண வைக்காதிங்க ! சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அதிரடி
04:11கேட்காமலேயே பல நல்ல திட்டங்களை தந்த முதல்வருக்கு நன்றி! – நலத்திட்டங்கள் குறித்து வன்னி அரசு பேச்சு
02:28சட்டமன்றத்தில் கோபப்படுவதை , வெளிநடப்பு செய்வதை தவிர்க்க வேண்டும் ! J.C.D. பிரபாகரன் அதிரடி
Read more