Viral :  ஊர் கட்டுப்பாடு என பெயரில் சிறுவர்களுக்கு திண்பண்டங்களை வழங்க மறுத்த கடைக்காரர்!

Viral : ஊர் கட்டுப்பாடு என பெயரில் சிறுவர்களுக்கு திண்பண்டங்களை வழங்க மறுத்த கடைக்காரர்!

Published : Sep 17, 2022, 11:09 AM IST

தென்காசி, சங்கரன்கோவில் அருகிலுள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் ஆதிதிராவிட பள்ளி குழந்தைகளுக்கு ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் திண்பண்டங்களை வழங்க முடியாது எனக்கூறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிட பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்தப் பள்ளியில் அந்தப் பகுதியை சுற்றியுள்ள பல்வேறு சமூகத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் அந்த பள்ளியில் பயின்ற ஒரு சமூகத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் பாஞ்சாங்குளம் கிராமத்தில் உள்ள கடைக்கு சென்று தின்பண்டங்கள் வாங்க முற்படும்போது அந்த கடை உரிமையாளர் உங்களுக்கு தின்பண்டம் கொடுக்க முடியாது என்று ஊர் கூட்டம் போட்டு முடிவு செய்துள்ளார்கள். அதனால், கட்டுப்பாட்டு உள்ளது என்று தெரிவிக்கிறார்.

ஆனால் விவரம் தெரியாத அந்த ஒரு சிறுவன் கட்டுப்பாட்டு என்றால் என்ன என்று கேட்கின்றான் அதற்கு அவர் உங்கள் யாருக்கும் தின்பண்டம் கொடுக்கக் கூடாது என்று எங்க ஊர் சார்பில் கூட்டம் போட்டு முடிவு செய்துள்ளார்கள். அதனால் நீங்கள் யாரும் இங்கு வாங்க முடியாது என்றும் உங்கள் தாய் தந்தையரிடம் போய் இதை சொல்லுங்கள் என்றும் மாணவர்களை அனுப்பி வைக்கிறார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிறு மாணவர்கள் மத்தியில் ஜாதி உணர்வை தூண்டும் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் முகம் சுளிக்க வைத்திருக்கிறது
 

04:11ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது கூடுதல் வலிமை சேர்ந்திருப்பதாக வரவேற்று மகிழ்கிறோம் ! திருமாவளவன் பேட்டி
04:28காங்கிரஸ் உடனான சட்டமன்றத் தேர்தல் குறித்து தலைமை அறிவிக்கும் - முத்துசாமி பேட்டி
05:49தமிழக அரசியலில் இதுவரை இல்லாத திருப்பம் திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ்.. EPS-க்கு அதிர்ச்சி
02:05ஒரு அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நல்லகண்ணு ஐயா தான் உதாரணம் ! பிரேமலதா பேட்டி
02:17நல்லகண்ணுக்கு பாரத் ரத்னா விருதை வழங்க வேண்டும் - தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
03:02செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
04:38தலைவர் விஜய் குறித்து அனைவரும் கருத்து சொல்வதற்கு காரணம் தோல்வி பயம் ! TVK செங்கோட்டையன் பேட்டி
03:33எடப்பாடி பழனிச்சாமி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார் - அமைச்சர் ரகுபதி பேட்டி.
04:35சேகர்பாபு போல நான் அண்டிப்பிழைக்கும் ஆண்டி அல்ல.. ரவுடி போல சேகர்பாபு இருக்கிறார் - அண்ணாமலை பேட்டி
04:14நாட்டின் நிலவரம் என்னவென்றே விஜய்க்கு தெரியவில்லை...இவரை வைத்து என்ன செய்வது..? இபிஎஸ் பேட்டி
Read more