Viral :  ஊர் கட்டுப்பாடு என பெயரில் சிறுவர்களுக்கு திண்பண்டங்களை வழங்க மறுத்த கடைக்காரர்!

Viral : ஊர் கட்டுப்பாடு என பெயரில் சிறுவர்களுக்கு திண்பண்டங்களை வழங்க மறுத்த கடைக்காரர்!

Published : Sep 17, 2022, 11:09 AM IST

தென்காசி, சங்கரன்கோவில் அருகிலுள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் ஆதிதிராவிட பள்ளி குழந்தைகளுக்கு ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் திண்பண்டங்களை வழங்க முடியாது எனக்கூறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிட பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்தப் பள்ளியில் அந்தப் பகுதியை சுற்றியுள்ள பல்வேறு சமூகத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் அந்த பள்ளியில் பயின்ற ஒரு சமூகத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் பாஞ்சாங்குளம் கிராமத்தில் உள்ள கடைக்கு சென்று தின்பண்டங்கள் வாங்க முற்படும்போது அந்த கடை உரிமையாளர் உங்களுக்கு தின்பண்டம் கொடுக்க முடியாது என்று ஊர் கூட்டம் போட்டு முடிவு செய்துள்ளார்கள். அதனால், கட்டுப்பாட்டு உள்ளது என்று தெரிவிக்கிறார்.

ஆனால் விவரம் தெரியாத அந்த ஒரு சிறுவன் கட்டுப்பாட்டு என்றால் என்ன என்று கேட்கின்றான் அதற்கு அவர் உங்கள் யாருக்கும் தின்பண்டம் கொடுக்கக் கூடாது என்று எங்க ஊர் சார்பில் கூட்டம் போட்டு முடிவு செய்துள்ளார்கள். அதனால் நீங்கள் யாரும் இங்கு வாங்க முடியாது என்றும் உங்கள் தாய் தந்தையரிடம் போய் இதை சொல்லுங்கள் என்றும் மாணவர்களை அனுப்பி வைக்கிறார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிறு மாணவர்கள் மத்தியில் ஜாதி உணர்வை தூண்டும் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் முகம் சுளிக்க வைத்திருக்கிறது
 

02:40Tamilnadu Rain: சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த வார்னிங்
04:17இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் தான் மே தினக் கொண்டாட்டம் - மு.க.ஸ்டாலின் | May Day 2026
02:44தேர்தல் வெற்றி: 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று விஜய் ..! செங்கோட்டையன் பேட்டி | TVK Vijay
03:39அவினாசி தொகுதியில் பா.ஜ.க வெற்றி உறுதி! மத்திய அமைச்சர் எல். முருகன் தேர்தல் குறித்து அதிரடி பேட்டி
03:08ஊட்டியில் வெளுத்து வாங்கிய கனமழை.! மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும்.!
02:33சித்ரா பவுர்ணமி ஸ்பெஷல் ! கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் நிகழும் சூரிய-சந்திர சந்திப்பு !
02:41கோவையில் விடாமல் கொட்டி தீர்க்கப்போகும் கோடை மழை.. லிஸ்ட்டில் எந்தெந்த மாவட்டங்கள் இருக்கு தெரியுமா?
04:24த.வெ.க-விற்கு 37 இடங்கள் கிடைத்தால் விஜய் முதலமைச்சரா? 2018ல் கர்நாடகாவில் என்ன நடந்தது தெரியுமா?
02:01ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. ஜாமீனில் வந்த முக்கிய ரவுடி.. சுத்துப்போட்ட போலீஸ்.. நடந்தது என்ன?
03:29தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்...! முந்தும் அதிமுக.. விடாத திமுக..
Read more