கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே தமிழகத்தில் பல பகுதிகளில் வெப்பநிலை முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் இரவில் கடும் குளிரும், அதிகபட்ச வெப்ப நிலையும் நிலவுகிறது. இந்த ஆண்டில் வெப்ப அலை ஏற்பட வாய்ப்புள்ளதால் அதை சமாளிக்க அரசும் மக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் வரும் நாட்களில் வெப்ப நிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.