Pongal Gift Package : இந்த புதிய 2024ம் ஆண்டு பிறந்துள்ள நிலையில், விரைவில் தமிழர்களின் திருநாளாம் தை திருநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து அறிவித்துள்ளது.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, இந்த 2024ம் ஆண்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படும் என்றும், அதற்கு ஆகவிருக்கும் செலவு குறித்தும் தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.