புதுச்சேரியில் சர்வதேச யோகா திருவிழா நாளை கடற்கரை சாலையில் நடைபெற உள்ளது. திருவிழாவில் மத்திய அமைச்சர்,துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்,அரசு உயர் அதிகாரிகள் என பலரும் பங்கேற்க உள்ளனர். இந்த பேனர்களில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு அனைத்தும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே உள்ளன. இதற்கு புதுச்சேரியில் இருக்கக்கூடிய எதிர்கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் ஆட்சி மொழியாக உள்ள புதுச்சேரியில் சர்வதேச யோகா திருவிழாவுக்கு தமிழ் முழுவதும் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து,தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கிழக்கு கடற்கரை சாலை சிவாஜி சிலை சிக்னல், அஜந்தா சிக்னல், இந்திரா காந்தி சிலை சதுக்கம், ராஜீவ் காந்தி சிலை சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை கருப்பு மை பூசி அழித்து மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களையும் எழுப்பினர் இதனால் புதுச்சேரியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.