
பரமக்குடியை சேர்ந்த ராம் பிரகாஷ் (32) என்பவர் ராமேஸ்வரத்தில் இருந்து வந்த ரயிலில் பயணிகளிடம் சோதனை செய்து டிக்கெட் எடுக்காதவர்களிடம் அபராதம் வசூல் செய்துள்ளார்.இந்த நிலையில் திருச்சியை சேர்ந்த டிக்கெட் பரிசோதகர் சரவணன் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்தபோது ஏற்கனவே டிக்கெட்டை காட்டி விட்டதாக பயணிகள் தெரிவித்தனர்.இதனால் அதிர்ச்சியடைந்த டிக்கெட் பரிசோதகர் சரவணன் ரயிலில் இருந்த போலி டிக்கெட் பரிசோதகர் ராம்பிரகாஷிடம் ரயில்வே அடையாள அட்டை காட்டும் படி கேட்டுள்ளார்.