15 கடைகளில் குல்லா, மாஸ்க் அணிந்து திருடிய கொள்ளையன்.. சிசிடிவி காட்சி உள்ளே

15 கடைகளில் குல்லா, மாஸ்க் அணிந்து திருடிய கொள்ளையன்.. சிசிடிவி காட்சி உள்ளே

Published : Sep 25, 2022, 02:57 PM IST

உதகையில் நள்ளிரவில்  பட்டாகத்தி மற்றும் ஆயுதங்களுடன் மர்ம நபர் ஒருவர், 15 க்கும் மேற்பட்ட கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளான்.

நீலகிரி மாவட்டம் உதகை மையப்பகுதியில் உள்ள நகராட்சி சந்தையில் சுமார் 1700 க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் நேற்று நள்ளிரவு 15 க்கும் மேற்பட்ட கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

இன்று அதிகாலை வழக்கம் போல் கடைகளை திறக்க வந்த வியாபாரிகள், பூட்டு உடைந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மொத்தமாக 15 கடைகளில் பூட்டு உடைக்கப்பட்டு, கல்லாப்பெட்டியில் இருந்த பணம் திருடப்பட்டிருந்தது.

இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து , விரைந்த வந்த காவல் துறையினர் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தில், மர்மநபர் ஒருவன் முகமூடி அணிந்து, கையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றி திரிவது தெரியவந்துள்ளது.

இதுக்குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளில் அடிப்படையில் மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலுன் இந்த கொள்ளை சம்பவத்தில் ஏதேனும் கும்பல் ஈடுபட்டதா எனும் கோணங்களிலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. 

04:38தலைவர் விஜய் குறித்து அனைவரும் கருத்து சொல்வதற்கு காரணம் தோல்வி பயம் ! TVK செங்கோட்டையன் பேட்டி
03:33எடப்பாடி பழனிச்சாமி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார் - அமைச்சர் ரகுபதி பேட்டி.
04:35சேகர்பாபு போல நான் அண்டிப்பிழைக்கும் ஆண்டி அல்ல.. ரவுடி போல சேகர்பாபு இருக்கிறார் - அண்ணாமலை பேட்டி
04:14நாட்டின் நிலவரம் என்னவென்றே விஜய்க்கு தெரியவில்லை...இவரை வைத்து என்ன செய்வது..? இபிஎஸ் பேட்டி
03:28கூட்டணி பேச்சுவார்த்தை காங்கிரஸ்யிடம் நடந்து வருகிறது தொகுதி எண்ணிக்கை குறித்து பேசவில்லை - கனிமொழி
03:05அண்ணா மற்றும் திராவிடத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை ! வைகோ பேட்டி
02:32கோயில் அருகே சுடுகாடு மற்றும்பாதாள சாக்கடை திட்டம் அமைப்பதற்கு எதிர்ப்பு கிராம மக்கள் எச்சரிக்கை
04:50விஜய்யின் இன்ஜினில் ஆயில் இல்லை...எங்களிடம் 2 டபுள் இன்ஜின் இருக்கிறது ! அண்ணாமலை அதிரடி பேட்டி
02:03விஜய்க்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஒற்றை எண்ணம் மட்டும் தான் ! டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி
04:41விஜய் அண்ணா சொன்ன மாதிரி எங்களிடம் மக்கள் கூட்டணி உள்ளது ! நடிகர் சௌந்தரராஜா பேட்டி