“உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த பொன்முடி

“உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த பொன்முடி

Published : Feb 16, 2024, 06:50 PM IST

விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து "உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்" என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் திமுக  துணை பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான க,பொன்முடி தலைமையில் விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து "உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்" என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

தனது தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்டம் என்பதால் மேடையை பார்க்க வந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இன்று வாக்கு முகவர்களுக்கான கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் இளைஞர் அணி, மாணவர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்வதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். அதனை தொடர்ந்து மாலை நடைபெறும் பொது கூட்டத்தில் கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கலந்து கொண்டு உரையாற்ற இருப்பதாக தெரிவித்தார்.

 

01:00Illicit Liquor: பால் பாக்கெட்டை போல் வீடு வீடாக டோர் டெலிவரி செய்யப்படும் சாராய பாக்கெட்
02:31 90 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலைக்கு 5000 லிட்டர் பால் அபிஷேகம்.. ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
02:23புகழேந்தி எம்.எல்.ஏ. உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
23:31ஆளுநருக்கு சட்டம் தெரியாதா? நீதிமன்றம் தான் சரி.. ஆளுநரை வெளுத்து வாங்கிய அமைச்சர் பொன்முடி..
02:15Car Festival: திரும்பும் திசையெங்கும் மனித தலைகள்; மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலய தேர் திருவிழா கோலாகலம்
04:09பொன்முடி மீதான தண்டனை நிறுத்தி வைப்பு; திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
04:42ஸ்ரீ வராகி அம்மன் ஆலய மயான கொள்ளை விழா; ஆயிரக்கணகான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு
02:54விளவங்கோடு தொகுதியை காலியானதாக அறிவித்த சபாநாயகர், பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதியை அறிவிக்காதது ஏன்? பாஜக
05:59“உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த பொன்முடி
Read more