Watch : 20 ஆண்டு கால எதிர்பார்ப்பு! முத்துப்பேட்டை தாலுக்கா உயதம்!

Watch : 20 ஆண்டு கால எதிர்பார்ப்பு! முத்துப்பேட்டை தாலுக்கா உயதம்!

Published : Apr 06, 2023, 05:55 PM ISTUpdated : Apr 06, 2023, 06:22 PM IST

20 ஆண்டு காலமாக மக்கள் எதிர்பார்த்த முத்துப்பேட்டை தாலுக்கா உதயமானது. காணொளி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
 

முத்துப்பேட்டையை தலைமை இடமாகக் கொண்ட புதிய தாலுக்கா வேண்டும் என கடந்த 20 ஆண்டு காலமாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சி காலத்தில் முத்துப்பேட்டை தாலுகா அறிவிப்பு வெளியானது. அதன் பின்னர் 2013ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

பல்வேறு அரசியல் காரணங்களுக்காக தொடர்ந்து முத்துப்பேட்டை தாலுகா அரசாணை நடைமுறைக்கு வராமல் இருந்த நிலையில், தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் சட்டமன்றத்தில் இது தொடர்பான கோரிக்கையை திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விடுத்த கோரிக்கையை ஏற்று, புதிதாக அரசாணை கடந்த மார்ச் 28ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அதன்படி மன்னார்குடி வட்டத்தில் இருந்தும், திருத்துறைப்பூண்டி வட்டத்தில் இருந்தும் 38 கிராமங்கள் பிரித்து எடுக்கப்பட்டு முத்துப்பேட்டையை தலைமை இடமாகக் கொண்ட புதிய தனி வட்டம் செயல்பட தொடங்கியுள்ளது. இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையிலிருந்து படி காணொளி காட்சி வாயிலாக முத்துப்பேட்டை தனி வட்டத்தை தொடங்கி வைத்தார்.



அதையொட்டி திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ கே எஸ் விஜயன், தாட்கோ தலைவர் மதிவாணன், மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு ஆகியோர் பங்கேற்றனர்.

01:58ஆபத்தான நிலையில் அரசு பேருந்துகள்: உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயணம் - முதல்வரின் சொந்த ஊரில் அவலம்!
02:10நெரிசலில் சிக்கி தவித்த வாகனங்கள்; கைக்குழந்தையுடன் களத்தில் இறங்கி போக்குவரத்தை சரி செய்த காவலர்
03:20முதல்வரோட சொந்த ஊர்ல ஆஸ்பத்திரி இவ்ளோ மோசமா இருக்கு - பொதுவெளியில் அதிகாரியை அலரவிட்ட வேல்முருகன்
04:09ஆழித் தேர் திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்த நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது
05:48பிறவி கடன், திருமண தடை நீங்கும் தர்மபுரீஸ்வரர் ஆலய சுவாமி வீதியுலா; பக்தர்கள் பரவசத்துடன் வழிபாடு
03:36நெருப்பை தாண்டி குதித்த மாடுகள்; திருவாரூர் பொங்கல் விழாவில் சுவாரசியம்
04:41மன்னார்குடியில் கல்லூரி பொங்கல் விழாவில் மாட்டு வண்டி ஓட்டியும், கும்மி அடித்தும் மாணவிகள் அசத்தல்
04:15மாட்டு வண்டி, பறையாட்டம் என பாரம்பரிய சாயலில் கலைகட்டிய பொங்கல் விழா; திருவாரூரில் கோலாகலம்
00:56திருவாரூரில் அரசுப்பேருந்து நடத்துநர் மீது கொலைவெறி தாக்குதல்; கல்லூரி மாணவர்கள் கைது
04:242 வயதில் உயிரிழந்த மகளை அம்மன் சிலையாக வடித்து கும்பாபிஷேகம் நடத்திய தந்தை; பொதுமக்கள் நெகிழ்ச்சி
Read more