ஆட்டுக்குட்டிக்காக பால் சுரக்கும் பசு; இணையத்தில் வைரலாகும் வீடியோ

ஆட்டுக்குட்டிக்காக பால் சுரக்கும் பசு; இணையத்தில் வைரலாகும் வீடியோ

Published : Dec 06, 2023, 08:02 PM IST

திருவாரூர் மாவட்டத்தில் பசு மாட்டிடம் பால் குடிக்கும் ஆட்டுக் குட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த நெடுவாக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி அசோக் குமார். இவரது குடும்பத்தினர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். இதில் ஒரு பசுமாடு மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு கன்றை ஈன்று பால் கொடுத்து வருகிறது. இந்நிலையில் அவர் வீட்டில் வளர்த்து வரும் ஆடு ஒன்று சில நாட்களுக்கு முன் குட்டி ஒன்றை ஈன்றது. 

அசோக் குமாரின் வீட்டில் ஆடு மாடுகள் ஒன்றாக வளர்ந்து வருவதால் அவற்றுக்குள் பாசப்பிணைப்பு ஏற்பட்டு ஆட்டுக்குட்டியானது பசுமாட்டிடம் சில நாட்களாக பால் குடித்து வருகிறது. இது காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆட்டுக்குட்டி, பசு மாட்டிடம் பால் குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

01:58ஆபத்தான நிலையில் அரசு பேருந்துகள்: உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயணம் - முதல்வரின் சொந்த ஊரில் அவலம்!
02:10நெரிசலில் சிக்கி தவித்த வாகனங்கள்; கைக்குழந்தையுடன் களத்தில் இறங்கி போக்குவரத்தை சரி செய்த காவலர்
03:20முதல்வரோட சொந்த ஊர்ல ஆஸ்பத்திரி இவ்ளோ மோசமா இருக்கு - பொதுவெளியில் அதிகாரியை அலரவிட்ட வேல்முருகன்
04:09ஆழித் தேர் திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்த நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது
05:48பிறவி கடன், திருமண தடை நீங்கும் தர்மபுரீஸ்வரர் ஆலய சுவாமி வீதியுலா; பக்தர்கள் பரவசத்துடன் வழிபாடு
03:36நெருப்பை தாண்டி குதித்த மாடுகள்; திருவாரூர் பொங்கல் விழாவில் சுவாரசியம்
04:41மன்னார்குடியில் கல்லூரி பொங்கல் விழாவில் மாட்டு வண்டி ஓட்டியும், கும்மி அடித்தும் மாணவிகள் அசத்தல்
04:15மாட்டு வண்டி, பறையாட்டம் என பாரம்பரிய சாயலில் கலைகட்டிய பொங்கல் விழா; திருவாரூரில் கோலாகலம்
00:56திருவாரூரில் அரசுப்பேருந்து நடத்துநர் மீது கொலைவெறி தாக்குதல்; கல்லூரி மாணவர்கள் கைது
04:242 வயதில் உயிரிழந்த மகளை அம்மன் சிலையாக வடித்து கும்பாபிஷேகம் நடத்திய தந்தை; பொதுமக்கள் நெகிழ்ச்சி