திருத்தணியில் கால்வாய்க்குள் பாய்ந்த மினி பேருந்து; 10 பயணிகள் படுகாயம்

திருத்தணியில் கால்வாய்க்குள் பாய்ந்த மினி பேருந்து; 10 பயணிகள் படுகாயம்

Published : Jan 10, 2024, 12:49 PM IST

திருத்தணி அருகே ஏரி கால்வாயில் மினி பேருந்து கவிழ்ந்து 5 பெண்கள் உள்பட 10 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் இருந்து வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான பயணிகள் மினி பேருந்தை ஓட்டுநர் பர்குணன் வளர்புரம் நோக்கி ஓட்டி வந்தார். இந்த பேருந்தில் 22 பயணிகள் இருந்தனர். பேருந்து டி.புதூர் பகுதியை கடக்கும் பொழுது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கால்வாயில் மினி பேருந்து திடீரென்று கவிழ்ந்தது.

விபத்தைத் தொடர்ந்து பேருந்தில் இருந்த 22 பயணிகளும் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். இதில் 5 பெண்கள் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடினார். இந்நிலையில் திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மினி பேருந்து ஏரி கால்வாயில் கவிழ்ந்தது காரணங்கள் குறித்து ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

00:54ஏழைகளின் உயிரில் துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சி? அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த அவலம்
02:22Accident : திருத்தணி.. பைக் மீது மோதிய கார் - நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்ற கணவன், மனைவி பலியான கொடூரம்!
05:18நயினார் நாகேந்திரன் விவகாரம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கொடுத்த ட்விஸ்ட்..
02:02திருத்தணியின் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்! பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..!
04:33தேர்தல் பணிகளில் ஈடுபட்ட துணை ராணுவத்தினருக்கு விருந்து வைத்த திருத்தணி போலீசார்.. நெகிழ்ச்சி செயல்!
02:11மறுபடியும் அமைச்சராகிடனும் முருகா! திருத்தணியில் வேட்பு மனுவை வைத்து ரோஜா சிறப்பு பிரார்த்தனை
02:18 கோயிலில் இருந்து கொண்டு! அர்ச்சகர்கள் பேசுற பேச்சா இது! ஆபாச பேச்சால் முகம் சுளித்த பக்தர்கள்! வைரல் வீடியோ!
02:10திருவள்ளூரில் மாமூல் தர மறுத்த பார் ஊழியர் மீது கொலை முயற்சி; ஊழியர் படுகாயம்
02:55திருவள்ளூரில் வங்கி மேலாளரை செருப்பால் அடித்த பாஜக மாநில நிர்வாகி; போலீஸ் அதிரடி
02:58234 தொகுதிகளிலும் நடிகர் விஜய் விரைவில் சூறாவளி சுற்றுப்பயணம் - புஸ்ஸி ஆனந்த் தகவல்
Read more