Watch : இழப்பீடு வழங்காத பொதுப்பணித்துறை! நாய்க்கு தாலி கட்டி நூதன போராட்டம் நடத்தும் விவசாயிகள்!

Watch : இழப்பீடு வழங்காத பொதுப்பணித்துறை! நாய்க்கு தாலி கட்டி நூதன போராட்டம் நடத்தும் விவசாயிகள்!

Published : Aug 19, 2023, 11:31 AM IST

நல்லதங்காள் ஓடை அருகே அணை கட்டுமானத்திற்காக கையகப்படுத்திய நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை எனக் கூறி விவசாயிகள் நூதன போராட்டதில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் உள்ள நல்லதங்காள் ஓடை நீர்த்த அணை கட்டுமான பணிக்காக 150 விவசாயிகளிடமிருந்து 820-ஏக்கர் நிலத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த 1997-ஆம் ஆண்டு கையகப்படுத்தி 2000-ஆம் ஆண்டு அணை கட்டுமான பணிகளை தொடங்கினர்.அப்போது விவசாயிகளிடம் அணை கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது.

நிலம் கொடுத்த விவசாயிகள் உரிய இழப்பீடு தொகை கேட்டு 2003-ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்த விவசாயிகள்.வழக்கில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை மற்றும் அதற்கு உண்டான வட்டியை சேர்த்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என கடந்த 2019-ஆம் ஆண்டு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

இருப்பினும் விவசாயிகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய இழப்பீடு தொகை வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நல்லதாங்கால் அணைப்பகுதியில் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 5-வது நாள் காத்திருப்பு போராட்டத்தில் நாய்க்கும் - விவசாயியான பாலசுப்பிரமணியனுக்கும் மங்கள வாத்தியங்கள் முழங்க திருமணம் நடைபெற்றது. இதில் மாலை அணிவித்து. மஞ்சள் கட்டி தாலி கயிற்றை_விவசாயி பாலசுப்பிரமணியம் நாய் கழுத்தில் கட்டி திருமணம் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

00:30திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் ரொமான்ஸ்; ரூ.13000 அபராதம் விதித்த போலீஸ்
00:41Accident Video: தவறான திசையில் எண்ட்ரி கொடுத்த கார்; சாலையில் தலைகீழாக கவிழ்ந்த அதிர்ச்சி வீடியோ
02:59கள்ளக்குறிச்சி சம்பவம்: நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.. நடிகர் விதார்த் பேட்டி!
02:08திருப்பூர்.. போதையால் சீரழியும் சிறுவர்கள்.. பொதுவெளியில் போதைப்பொருள் உட்கொள்ளும் அவலம் - Viral Video!
00:45திருப்பூரில் அதிகரிக்கும் விபச்சாரம்.. ரெய்டு விட்ட போலீஸ்.. கையும் களவுமாக சிக்கிய அழகிகள்..
02:14கொடியை கழட்ட சொன்ன பாஜகவினர்.. ஆபாசமாக திட்டிய அதிமுகவினர்.. கடும் மோதல்.. பல்லடத்தில் பரபரப்பு
29:57பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திருப்பூர் மணிப்பூராகிவிடும்.. எச்சரித்த முதல்வர் முக ஸ்டாலின்..
03:58அவிநாசி லிங்கேஸ்வரர் ஆலய மகா தெப்போற்சவம் விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு தரிசனம்
00:46முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.3,33,500/- பணம் பறிமுதல்!
02:31திருப்பூரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற வள்ளி கும்மியாட்டம்; மெய்சிலிர்த்து பார்த்த நடிகர் ரஞ்சித்