பிறந்து 1 மாதமேயான பச்சிளம் குழந்தையை பேருந்து நிலையத்தில் தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

பிறந்து 1 மாதமேயான பச்சிளம் குழந்தையை பேருந்து நிலையத்தில் தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published : Feb 16, 2024, 06:43 PM IST

திருப்பூர் பேருந்து நிலையத்தில் பிறந்து 1 மாதமே ஆன பச்சிளம் குழந்தையை விட்டுச் சென்ற இளம் பெண் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த செல்லம்மாள் திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் சிற்றுண்டி ஒன்றை நடத்தி வருகிறார். இவர் இன்று காலை தனது சொந்த ஊருக்கு செல்ல திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். பேருந்துக்காக காத்திருந்த நிலையில் அருகில் நின்றிருந்த 19 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சிறிது தயக்கத்துடன் வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். 

இதனால் அருகில் உள்ள கழிவறைக்கு சென்று வரும் வரை குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு குழந்தையை செல்லம்மாளிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். குழந்தையை குடுத்துவிட்டு சென்ற பெண் மீண்டும் வரவில்லை. காலை 8:30 மணிக்கு குழந்தையை வாங்கிய செல்லம்மாள்  11:30 வரை மணி வரை இளம் பெண்ணுக்காக காத்திருந்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரிடம் நடந்ததை விளக்கியுள்ளார். பின்னர் அப்பெண்ணை பேருந்து நிலையத்தில் உள்ள தெற்கு புற காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தகவல் அறிந்த ஆய்வாளர் கணேஷ்குமார், உதவி ஆய்வாளர் பிச்சையா உள்ளிட்ட காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில், பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை என்பது தெரிய வந்தது. மேலும் அங்குள்ள சி.சி.டிவி கேமராவை  ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

பின்னர் அக்குழந்தை பராமரிப்பிற்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது.

00:30திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் ரொமான்ஸ்; ரூ.13000 அபராதம் விதித்த போலீஸ்
00:41Accident Video: தவறான திசையில் எண்ட்ரி கொடுத்த கார்; சாலையில் தலைகீழாக கவிழ்ந்த அதிர்ச்சி வீடியோ
02:59கள்ளக்குறிச்சி சம்பவம்: நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.. நடிகர் விதார்த் பேட்டி!
02:08திருப்பூர்.. போதையால் சீரழியும் சிறுவர்கள்.. பொதுவெளியில் போதைப்பொருள் உட்கொள்ளும் அவலம் - Viral Video!
00:45திருப்பூரில் அதிகரிக்கும் விபச்சாரம்.. ரெய்டு விட்ட போலீஸ்.. கையும் களவுமாக சிக்கிய அழகிகள்..
02:14கொடியை கழட்ட சொன்ன பாஜகவினர்.. ஆபாசமாக திட்டிய அதிமுகவினர்.. கடும் மோதல்.. பல்லடத்தில் பரபரப்பு
29:57பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திருப்பூர் மணிப்பூராகிவிடும்.. எச்சரித்த முதல்வர் முக ஸ்டாலின்..
03:58அவிநாசி லிங்கேஸ்வரர் ஆலய மகா தெப்போற்சவம் விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு தரிசனம்
00:46முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.3,33,500/- பணம் பறிமுதல்!
02:31திருப்பூரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற வள்ளி கும்மியாட்டம்; மெய்சிலிர்த்து பார்த்த நடிகர் ரஞ்சித்