ஆமை வேகத்தில் நடைபெறும் நெடுஞ்சாலை பணிகள்; மக்கள் ஜனநாயக கட்சியினர் விசித்திர போராட்டம்

ஆமை வேகத்தில் நடைபெறும் நெடுஞ்சாலை பணிகள்; மக்கள் ஜனநாயக கட்சியினர் விசித்திர போராட்டம்

Published : Dec 11, 2023, 10:59 PM IST

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலைத்துறை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக கூறி ஆமையின் புகைப்படத்துடன் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியான 44, 45வது வார்டு பகுதியில் முக்கிய சாலையான தாராபுரம் சாலையில் இருந்து காங்கேயம் சாலை செல்லும் பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒரு வருட காலமாக ஆமை வேகத்தில் நெடுஞ்சாலைப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மாவட்ட நிர்வாகம் துரிதமாக இந்த சாலை பணிகளை செய்து முடித்திட நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி ஆமை வேகத்தில் நடைபெறும் பணியை அதிகாரிகளுக்கு எடுத்துக்காட்டும் வகையில் ஆமை புகைப்படத்துடன் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். 

மேலும் திருப்பூர் மாநகரப் பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட பகுதிகளில் இதுபோன்று மெத்தனமாக சாலை பணிகள் நடந்து வருவதாகவும், இதனால் சாலை விபத்துகள் தினம் தோறும் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகளிடம் மக்கள் ஜனநாயக கட்சியினர் முறையிட்டனர்.

00:30திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் ரொமான்ஸ்; ரூ.13000 அபராதம் விதித்த போலீஸ்
00:41Accident Video: தவறான திசையில் எண்ட்ரி கொடுத்த கார்; சாலையில் தலைகீழாக கவிழ்ந்த அதிர்ச்சி வீடியோ
02:59கள்ளக்குறிச்சி சம்பவம்: நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.. நடிகர் விதார்த் பேட்டி!
02:08திருப்பூர்.. போதையால் சீரழியும் சிறுவர்கள்.. பொதுவெளியில் போதைப்பொருள் உட்கொள்ளும் அவலம் - Viral Video!
00:45திருப்பூரில் அதிகரிக்கும் விபச்சாரம்.. ரெய்டு விட்ட போலீஸ்.. கையும் களவுமாக சிக்கிய அழகிகள்..
02:14கொடியை கழட்ட சொன்ன பாஜகவினர்.. ஆபாசமாக திட்டிய அதிமுகவினர்.. கடும் மோதல்.. பல்லடத்தில் பரபரப்பு
29:57பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திருப்பூர் மணிப்பூராகிவிடும்.. எச்சரித்த முதல்வர் முக ஸ்டாலின்..
03:58அவிநாசி லிங்கேஸ்வரர் ஆலய மகா தெப்போற்சவம் விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு தரிசனம்
00:46முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.3,33,500/- பணம் பறிமுதல்!
02:31திருப்பூரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற வள்ளி கும்மியாட்டம்; மெய்சிலிர்த்து பார்த்த நடிகர் ரஞ்சித்