100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்காமல் இழுத்தடிப்பு; திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்காமல் இழுத்தடிப்பு; திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

Published : Oct 27, 2023, 10:34 AM IST

100 நாள் வேலை திட்டத்தில் முறையாக சம்பளம் வழங்காமல் இழுத்தடிப்பு செய்வதை கண்டித்தும், தீபாவளிக்கு முன்னதாக சம்பளம் வழங்க வலியுறுத்தியும் திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு உட்பட்ட 11 ஊராட்சிகளில் ஆயிரக்கணக்கான 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் மடத்துக்குளம் வட்டார பகுதியில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கடந்த காலங்களில், 100 நாள் வேலை திட்டத்தின் மூலமாக பணி செய்த பணியாளர்களுக்கு,  கடந்த 14 வாரங்களுக்கும் மேலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் சம்பளத்தொகை வரவு வைக்காமல் இழுத்தடிப்பு செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பாக 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் மற்றும் தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் மாநில மையக் குழு மற்றும் இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆகியோர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகளுக்கு வழங்கப்படாத சம்பளத் தொகையை தீபாவளிக்கு முன்பாகவே வரவு வைக்க வேண்டும் எனவும், மேலும் தொடர்ந்து 100 நாள் வேலை திட்டத்தை மடத்துக்குளம் வட்டார பகுதியில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், தொடர்ந்து நடைமுறைப்படுத்திட வேண்டும் எனவும், கோரிக்கை விடுத்தனர். அப்போது கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

00:30திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் ரொமான்ஸ்; ரூ.13000 அபராதம் விதித்த போலீஸ்
00:41Accident Video: தவறான திசையில் எண்ட்ரி கொடுத்த கார்; சாலையில் தலைகீழாக கவிழ்ந்த அதிர்ச்சி வீடியோ
02:59கள்ளக்குறிச்சி சம்பவம்: நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.. நடிகர் விதார்த் பேட்டி!
02:08திருப்பூர்.. போதையால் சீரழியும் சிறுவர்கள்.. பொதுவெளியில் போதைப்பொருள் உட்கொள்ளும் அவலம் - Viral Video!
00:45திருப்பூரில் அதிகரிக்கும் விபச்சாரம்.. ரெய்டு விட்ட போலீஸ்.. கையும் களவுமாக சிக்கிய அழகிகள்..
02:14கொடியை கழட்ட சொன்ன பாஜகவினர்.. ஆபாசமாக திட்டிய அதிமுகவினர்.. கடும் மோதல்.. பல்லடத்தில் பரபரப்பு
29:57பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திருப்பூர் மணிப்பூராகிவிடும்.. எச்சரித்த முதல்வர் முக ஸ்டாலின்..
03:58அவிநாசி லிங்கேஸ்வரர் ஆலய மகா தெப்போற்சவம் விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு தரிசனம்
00:46முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.3,33,500/- பணம் பறிமுதல்!
02:31திருப்பூரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற வள்ளி கும்மியாட்டம்; மெய்சிலிர்த்து பார்த்த நடிகர் ரஞ்சித்