சின்னாறு சோதனை சாவடியை காட்டு யானைகள் முகாமிட்டதால் வனத்துறையினரும், வாகன ஓட்டிகளும் அச்சம்

சின்னாறு சோதனை சாவடியை காட்டு யானைகள் முகாமிட்டதால் வனத்துறையினரும், வாகன ஓட்டிகளும் அச்சம்

Published : Dec 27, 2023, 10:19 AM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணார் சாலையில் அமைந்துள்ள சின்னாறு சோதனை சாவடியை காட்டு யானைகள் முற்றுகையிட்டதால் வனத்துறை ஊழியர்களும், வாகன ஓட்டிகளும் பீதி அடைந்தனர். 

ஆனைமலை புலிகள் காப்பத்திற்குள் உடுமலை அமராவதி வனச்சரகம் உடுமலையில் இருந்து கேரளா மாநிலம் மூணாறு செல்வதற்கு 9/6 வழியாக மலை வழி பாதை செல்கிறது. கேரளா மாநில எல்லையில் உள்ள மறையூர், காந்தளூர் மற்றும் மலையடிவார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்காக காய்கறி, பால், முட்டை மற்றும் கட்டுமான பொருட்கள், கறிக்கோழி உள்ளிட்டவற்றை வாங்க உடுமலை நகரத்திற்கு வந்து செல்கின்றனர்.

அண்மை காலமாக உடுமலை மூணாறு வழித்தடத்தில் ஏழுமலையான் கோவில் காமணத்து பள்ளம் உள்ளிட்ட பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனிடையே வனப் பகுதியில் பனிப்பொழிவும் அதிகரிப்பதால் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக அமராவதி அணையை நோக்கி படையெடுத்து வருகின்றன. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக 5க்கும் மேற்பட்ட குட்டிகளுடன் 15 காட்டிய யானைகள் மலை வழி பாதையில் சாலையோரம் முகாமிட்டுள்ளன.

கூட்டமாக இருக்கும் காட்டு யானைகள் வாகன ஓட்டிகளுக்கு அவ்வபோது இடையூறு செய்யாமல் பாதையை விட்டு ஓரமாக இறங்கி வனப் பகுதிக்குள் சென்று விடுகின்றன. இந்நிலையில் ஒற்றை யானை ஒன்று சாலை ஓரமாக உலா வருகிறது. இந்த யானை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழக கேரளா எல்லையில் உள்ள சின்னாறு சோதனை சாவடியை முற்றுகையிட்டது.

சோதனை சாவடியை முற்றுகையிட்ட காட்டு யானையை கண்டு வனத்துறை ஊழியர்களும், வாகன ஓட்டிகளும் சற்றே பீதி அடைந்தனர். இருப்பினும் நல்வாய்ப்பாக யானை அங்கிருந்தவர்களுக்கு எந்தவித தொந்தரவும் அளிக்காமல் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பதால் வாகன ஓட்டிகள் உடுமலை இருந்து மூணார் செல்லும் போது மூணாறில் இருந்து  உடுமலை செல்லும் போதும் யானைகளை படம்பிடிப்பதும் நடுவடையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றும் செல்பி என்ற பெயரில் யானைகளில் அருகே சென்று புகைப்படம் எடுப்பதும் யானைகளுக்கு எந்த வித தொந்தரவும் அளிக்கக்கூடாது என்று வனத்துறை எச்சரித்துள்ளனர்.

00:30திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் ரொமான்ஸ்; ரூ.13000 அபராதம் விதித்த போலீஸ்
00:41Accident Video: தவறான திசையில் எண்ட்ரி கொடுத்த கார்; சாலையில் தலைகீழாக கவிழ்ந்த அதிர்ச்சி வீடியோ
02:59கள்ளக்குறிச்சி சம்பவம்: நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.. நடிகர் விதார்த் பேட்டி!
02:08திருப்பூர்.. போதையால் சீரழியும் சிறுவர்கள்.. பொதுவெளியில் போதைப்பொருள் உட்கொள்ளும் அவலம் - Viral Video!
00:45திருப்பூரில் அதிகரிக்கும் விபச்சாரம்.. ரெய்டு விட்ட போலீஸ்.. கையும் களவுமாக சிக்கிய அழகிகள்..
02:14கொடியை கழட்ட சொன்ன பாஜகவினர்.. ஆபாசமாக திட்டிய அதிமுகவினர்.. கடும் மோதல்.. பல்லடத்தில் பரபரப்பு
29:57பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திருப்பூர் மணிப்பூராகிவிடும்.. எச்சரித்த முதல்வர் முக ஸ்டாலின்..
03:58அவிநாசி லிங்கேஸ்வரர் ஆலய மகா தெப்போற்சவம் விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு தரிசனம்
00:46முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.3,33,500/- பணம் பறிமுதல்!
02:31திருப்பூரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற வள்ளி கும்மியாட்டம்; மெய்சிலிர்த்து பார்த்த நடிகர் ரஞ்சித்