பல்லடம் அருகே தனியார் பஞ்சு மில்லில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்!!

பல்லடம் அருகே தனியார் பஞ்சு மில்லில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்!!

Published : Sep 21, 2022, 07:44 PM IST

பல்லடம் அருகே தனியார் பஞ்சு மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமமானது. 

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பூமலூரில் தனியாருக்கு சொந்தமான பஞ்சு மில் இயங்கி வருகிறது. கடந்த ஒரு வருடமாக இந்த மில் இயங்கி வருகிறது. பனியன் துணிகளை பஞ்சாக மாற்றி நூற்பாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் பணியில் இருந்த ஊழியர்கள் மில்லில் இருந்த மோட்டாரை சுத்தம் செய்த பொழுது திடீரென மோட்டார் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

இதில் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சு மூட்டைகளில் தீ மல மலவென பற்றி எரிந்தது. அதனை தொடர்ந்து இயந்திரங்களும் தீ பற்றியது.இது குறித்து பல்லடம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்துக்கு மேலாக தீயை அணைக்க போராடி வருகின்றனர்.தனியார் வாகனங்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசமாகின. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

00:30திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் ரொமான்ஸ்; ரூ.13000 அபராதம் விதித்த போலீஸ்
00:41Accident Video: தவறான திசையில் எண்ட்ரி கொடுத்த கார்; சாலையில் தலைகீழாக கவிழ்ந்த அதிர்ச்சி வீடியோ
02:59கள்ளக்குறிச்சி சம்பவம்: நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.. நடிகர் விதார்த் பேட்டி!
02:08திருப்பூர்.. போதையால் சீரழியும் சிறுவர்கள்.. பொதுவெளியில் போதைப்பொருள் உட்கொள்ளும் அவலம் - Viral Video!
00:45திருப்பூரில் அதிகரிக்கும் விபச்சாரம்.. ரெய்டு விட்ட போலீஸ்.. கையும் களவுமாக சிக்கிய அழகிகள்..
02:14கொடியை கழட்ட சொன்ன பாஜகவினர்.. ஆபாசமாக திட்டிய அதிமுகவினர்.. கடும் மோதல்.. பல்லடத்தில் பரபரப்பு
29:57பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திருப்பூர் மணிப்பூராகிவிடும்.. எச்சரித்த முதல்வர் முக ஸ்டாலின்..
03:58அவிநாசி லிங்கேஸ்வரர் ஆலய மகா தெப்போற்சவம் விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு தரிசனம்
00:46முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.3,33,500/- பணம் பறிமுதல்!
02:31திருப்பூரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற வள்ளி கும்மியாட்டம்; மெய்சிலிர்த்து பார்த்த நடிகர் ரஞ்சித்