பல்லடத்தில் சாலையை கடக்க முயன்றவரை மோதி வீசிவிட்டு நிற்காமல் சென்ற கார்; சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

பல்லடத்தில் சாலையை கடக்க முயன்றவரை மோதி வீசிவிட்டு நிற்காமல் சென்ற கார்; சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

Published : Sep 19, 2023, 10:09 AM IST

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையை கடக்க முயன்ற நபர் மீது வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பச்சாபாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் அவர் பிரபல பேக்கரி ஒன்றில் டீ சாப்பிட்டு விட்டு கோவை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கோவையில் இருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் அவர் தூக்கி வீசாப்பட்டு படுகாயமடைந்தார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக  அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

துணி காயவைக்கும்போது நேர்ந்த விபத்து; மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலி

மேலும் இச்சம்பவம் குறித்து பல்லடம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு வலை வீசி தேடி வருகின்றனர்.

00:30திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் ரொமான்ஸ்; ரூ.13000 அபராதம் விதித்த போலீஸ்
00:41Accident Video: தவறான திசையில் எண்ட்ரி கொடுத்த கார்; சாலையில் தலைகீழாக கவிழ்ந்த அதிர்ச்சி வீடியோ
02:59கள்ளக்குறிச்சி சம்பவம்: நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.. நடிகர் விதார்த் பேட்டி!
02:08திருப்பூர்.. போதையால் சீரழியும் சிறுவர்கள்.. பொதுவெளியில் போதைப்பொருள் உட்கொள்ளும் அவலம் - Viral Video!
00:45திருப்பூரில் அதிகரிக்கும் விபச்சாரம்.. ரெய்டு விட்ட போலீஸ்.. கையும் களவுமாக சிக்கிய அழகிகள்..
02:14கொடியை கழட்ட சொன்ன பாஜகவினர்.. ஆபாசமாக திட்டிய அதிமுகவினர்.. கடும் மோதல்.. பல்லடத்தில் பரபரப்பு
29:57பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திருப்பூர் மணிப்பூராகிவிடும்.. எச்சரித்த முதல்வர் முக ஸ்டாலின்..
03:58அவிநாசி லிங்கேஸ்வரர் ஆலய மகா தெப்போற்சவம் விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு தரிசனம்
00:46முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.3,33,500/- பணம் பறிமுதல்!
02:31திருப்பூரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற வள்ளி கும்மியாட்டம்; மெய்சிலிர்த்து பார்த்த நடிகர் ரஞ்சித்
Read more