VIDEO | கண்டெய்னர் வாகனம் மோதி 7வயது சிறுவன் பலி!  பெற்றோர் மருத்துவமனையில் அனுமதி!

VIDEO | கண்டெய்னர் வாகனம் மோதி 7வயது சிறுவன் பலி! பெற்றோர் மருத்துவமனையில் அனுமதி!

Published : Jun 27, 2023, 04:33 PM IST

காங்கேயம் அருகே கண்டெய்னர் வாகனம் மோதியதில் படுகாயமடைந்த 7வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

சேலத்தை சேர்ந்தவர் அப்துல்நபீப் (32) கூலி தொழிலாளி ஆன இவர் தனது மனைவி நிலாபர் நிஷா(28) மற்றும் அவரது 7 வயது மகனுடன், சேலத்தில் இருந்து, இருசக்கர வாகனம் மூலம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திற்கு வந்து கொண்டிருந்தனர். சேலத்தில் இருந்து வண்டியை கணவர் ஓட்டி வந்த நிலையில், காங்கேயம் பிரிவுக்கு அருகே, களைப்பாக இருந்ததால், அவரது மனைவி நிலாபர் நிஷா, வண்டியை ஓட்ட துவங்கியதாக கூறப்படுகிறது.

சிறிது தூரத்திலேயே, சாலையின் வளைவில் திரும்பிய போது, எதிர்பாராத விதமாக, திருப்பூரில் இருந்து மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்த கன்டெய்னர் வாகனம் ஸ்கூட்டி மீது பயங்கரமாக மோதியது. இதில், படுகாயம் அடைந்த 7 வயது சிறுவன் மற்றும் சிறுவனின் பெற்றோர்கள், சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு, சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். அவனது உடலை கண்டு அவனது பெற்றோர்கள் கதறி அழுத காட்சி, பார்ப்பவர்கள் மனதை உருக்குவதாக இருந்தது.

இது குறித்து, தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

00:30திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் ரொமான்ஸ்; ரூ.13000 அபராதம் விதித்த போலீஸ்
00:41Accident Video: தவறான திசையில் எண்ட்ரி கொடுத்த கார்; சாலையில் தலைகீழாக கவிழ்ந்த அதிர்ச்சி வீடியோ
02:59கள்ளக்குறிச்சி சம்பவம்: நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.. நடிகர் விதார்த் பேட்டி!
02:08திருப்பூர்.. போதையால் சீரழியும் சிறுவர்கள்.. பொதுவெளியில் போதைப்பொருள் உட்கொள்ளும் அவலம் - Viral Video!
00:45திருப்பூரில் அதிகரிக்கும் விபச்சாரம்.. ரெய்டு விட்ட போலீஸ்.. கையும் களவுமாக சிக்கிய அழகிகள்..
02:14கொடியை கழட்ட சொன்ன பாஜகவினர்.. ஆபாசமாக திட்டிய அதிமுகவினர்.. கடும் மோதல்.. பல்லடத்தில் பரபரப்பு
29:57பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திருப்பூர் மணிப்பூராகிவிடும்.. எச்சரித்த முதல்வர் முக ஸ்டாலின்..
03:58அவிநாசி லிங்கேஸ்வரர் ஆலய மகா தெப்போற்சவம் விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு தரிசனம்
00:46முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.3,33,500/- பணம் பறிமுதல்!
02:31திருப்பூரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற வள்ளி கும்மியாட்டம்; மெய்சிலிர்த்து பார்த்த நடிகர் ரஞ்சித்