திரையரங்க உணவகத்தில் கூலாக பப்ஸ் சாப்பிட்ட பூனை; ஷாக்கான ரசிகர்கள்: லாக் செய்த அதிகாரிகள்

திரையரங்க உணவகத்தில் கூலாக பப்ஸ் சாப்பிட்ட பூனை; ஷாக்கான ரசிகர்கள்: லாக் செய்த அதிகாரிகள்

Published : May 29, 2023, 08:09 PM IST

காரைக்குடியில் பிரபல திரையரங்கில் அதிரடியாக சோதனை மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், திரையரங்கத்தில் செயல்படும் உணவகத்திற்கு சீல் வைத்துச் சென்றனர்.

சிவகங்கை மாவட்டம் மகர்நோன்பு திடல் அருகே இயங்கி வருகிறது பிரபல (சத்தியன்)திரையரங்கம். இத்த திரையரங்கத்தில் நேற்று காலை காட்சியின் போது அங்குள்ள உணவகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பப்ஸை தட்டோடு பூனை சாப்பிட்டுள்ளது. இதனை ரசிகர் ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட இக்காட்சி வைரலாக பரவி வருகிறது. 

தகவல் அறிந்த மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பிரபாவதி தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட திரையரங்கில் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கேக், பப்ஸ், சமோசா, கூல்டிரிங்ஸ், பாப்கான் போன்றவற்றை ஆய்வு செய்தனர். இதில் பல உணவுப் பொருட்கள் காலாவதியாகி இருந்ததை உறுதி செய்து அதனை பறிமுதல் செய்து உணவகத்திற்கு சீல் வைத்தனர்.

02:26AIADMK Campaign : ஆரத்திக்கு பணம் கொடுக்கும் அதிமுகவினர்.. கண்டுகொள்ளாத அதிகாரிகள் - குமுறும் சமூக ஆர்வலர்கள்!
01:06முந்தாநாள் பெய்த மழையில் நேற்று முளைத்த காளான் அண்னாமலை: அதிமுக நிர்வாகி ஆவேசம்!
02:38சிவகங்கை: குஷ்புவின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்த முயன்ற திமுகவினர்.. அலேக்காக தூக்கிய போலீஸ்
2116:40மேடையிலேயே பழ.கருப்பையாவின் காலில் விழுந்த சிவக்குமார்; ரசிகரின் பொன்னாடையை தூக்கி வீசி அடாவடி
02:22தாயின் கல்லறையை மணமேடையாக்கிய இளைஞன்; மகனின் செயலால் குடும்பத்தினர் நெகிழ்ச்சி
04:45எங்கள் கட்சியில் சண்டையும் இல்லை, சச்சரவும் இல்லை - கார்த்திக் சிதம்பரம்
1866:40அடிக்குற வெயிலுக்கு எவ்வளவு தண்ணி குடிச்சாலும் தாகம் அடங்கலயே; குழாயை திறந்து தாமாக தண்ணீர் அருந்தும் காளை
03:03விறுவிறுப்பாக நடைபெற்ற சிறவாவயல் மஞ்சுவிரட்டில் நிகழ்ந்த சோகம்; சிறுவன் உள்பட இருவர் பலி
03:34டாப் 10 காளைகளுடன் மாட்டு பொங்கல் கொண்டாடிய இலங்கை ஆளுநர் செந்தில் தொண்டமான்
02:18சிவகங்கை ஏழைக்காத்தாள் அம்மன் கோவில் திருவிழா; உடல் முழுவதும் சேறு பூசி பக்தர்கள் வினோத நேர்த்திக்கடன்