முந்தாநாள் பெய்த மழையில் நேற்று முளைத்த காளான் அண்னாமலை: அதிமுக நிர்வாகி ஆவேசம்!

Mar 17, 2024, 12:58 PM IST

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பற்றி அவதூறாக பேசிய பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து சிவகங்கை மாவட்டம் முழுவதும் அதிமுக நிர்வாகி மணலூர் மணிமாறன் போஸ்டர் ஒட்டியுள்ளார். அதில் முந்தாநாள் பெய்த மழையில் நேற்று முளைத்த காளான் அண்ணாமலை என்றும், அரைவேக்காடு அண்ணாமலை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அப்பகுதியில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது