Watch : பொன்னமராவதி அருகே மழை வேண்டி மீன்பிடித் திருவிழா! ஊர் ஒற்றுமைக்காக திரண்ட மக்கள்!

Watch : பொன்னமராவதி அருகே மழை வேண்டி மீன்பிடித் திருவிழா! ஊர் ஒற்றுமைக்காக திரண்ட மக்கள்!

Published : Apr 24, 2023, 12:50 PM IST

பொன்னமராவதி அருகே மழை வேண்டியும் விவசாயம் தழைக்கவும் வேண்டி மீன்பிடித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஊர் ஒற்றுமைக்காக திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலத்தில் வற்றும் சூழலில் உள்ள பாசன‌ கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். ஜாதி,மதம் பாராமல் அனைவரும் ஒன்று கூடி இந்த மீன்பிடி திருவிழாவை ஊர் ஒற்றுமைக்காக நடத்துவர்.

கடந்த 15 ஆண்டுகளாக நடைபெறாமர் இருந்து மீன்பிடித் திருவிழா, இந்த ஆண்டு மழைபெய்யவும், விவசாயம் தழைக்கவும் வேண்டி வெகுவிமர்சையாக நடைபெற்றது. அதிகாலையிலேயே பொதுமக்கள் கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறையில் ஊத்தா, வலை, பரி, கச்சா ஆகிய மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்களை பிடித்தனர்.



அதில் ஒவ்வொருத்தர் கைகளுக்கும் நாட்டு வகை சிறிய மீன்களான சிசி, போட்லா, கட்லா, விரால், சிலேபி, அயிரை, கெண்டை ஆகிய மீன்கள் சிக்கின. முன்னதாக ஊர் பெரியவர்களால் வெள்ளை விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியைக் காண வெளியூர் நபர்களும் கண்மாய்க்கு வந்திருந்தனர்.

02:06எம்எல்ஏ பந்து வீச, அமைச்சர் சிக்சர் அடிக்க; புதுக்கோட்டையில் விறு விறு கிரிக்கெட் போட்டி
02:21பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா; கோலாகலமாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்
05:35கந்தர்வகோட்டை புனித செபஸ்தியார் ஆலய தை தேர் திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
07:28புதுக்கோட்டையில் நடைபெற்ற பழங்கால பொருட்கள் கண்காட்சியை வியந்து பார்த்த பொதுமக்கள்
04:45முடிஞ்சா தொட்டு பார்; வடமலாப்பூர் ஜல்லிக்கட்டில் வீரர்களை அலறவிட்ட விஜயபாஸ்கரின் கொம்பன் காளை
02:29ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள்; புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு
666:40கோவில் உண்டியலை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்; கேமரா முன்பாக நக்கல் செய்துவிட்டு ஓட்டம்
03:56புயல் பாதிப்பில் இருந்து சென்னை மக்கள் விரைவில் மீள வேண்டும்; புதுக்கோட்டையில் விளக்கு பூஜை செய்து பிரார்த்தனை
09:51புதுக்கோட்டை அன்னவாசல் அரசு மருத்துவமனையில் அமைச்சர் சுப்பிரமணியன்; பறந்த உத்தரவு!!
00:36அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாடம் நடத்திய கரூர் எம்.பி. ஜோதிமணி