Shocking Video: கவனக்குறைவாக சாலையை கடந்த XL வாகனம்; அசுர வேகத்தில் வந்து அடித்து தூக்கிய தனியார் பேருந்து

Shocking Video: கவனக்குறைவாக சாலையை கடந்த XL வாகனம்; அசுர வேகத்தில் வந்து அடித்து தூக்கிய தனியார் பேருந்து

Published : Jun 25, 2024, 12:26 PM IST

பள்ளிபாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற இருவர் மீது தனியார் பேருந்து மோதி தூக்கி வீசப்படும் விபத்து குறித்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சட்டையம்புதூர் பகுதியைச் சேர்ந்த விசைத்தறி கூலித் தொழிலாளர்கள் கண்ணன் மற்றும் கேசவன். இவர்கள் இருவரும் நேற்றைய தினம் திருச்செங்கோடு  அடுத்துள்ள வேலாத்தா கோயில் பகுதியில் உள்ள தங்களது உறவினர்களை காண அவர்களது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். சரியான முகவரி தெரியாத நிலையில் இருவரும் தாங்கள் செல்ல வேண்டிய பகுதியைக் கடந்து சென்றுள்ளனர். 

இதனால் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல தங்களது இரு சக்கர வாகனத்தை திருப்பி சாலையை கடக்க முயன்றுள்ளனர். காடச்சநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நின்று கொண்டு இருந்தால் பக்கவாட்டில் வந்த தனியார் பேருந்தினை கவனிக்காமல் சாலையின் மறுபுறம் கடக்க முயன்ற பொழுது திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற தனியார் பேருந்து அவர்கள் மீது மோதி இருவரும் இரண்டு சக்கர வாகனத்துடன் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். 

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பின்பக்கம் அமர்ந்திருந்த கண்ணனின் கை துண்டானது. இதே போல் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த கேசவனுக்கு தலை, கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக காயமடைந்தவர்களை பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

மேலும் இந்த விபத்து குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது தனியார் பேருந்து மோதி தூக்கி வீ சப்படும் பதை பதைக்கும் கட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

02:28Government Bus : நாமக்கல்.. அரசு பேருந்தின் அவல நிலை.. ஓடும்போதே உடைந்த போல்ட் & நட் - அடுத்து நடந்தது என்ன?
05:29Namakkal : ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்.. திரளாக வந்த பக்தர்கள் - நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்!
03:18Raid : தேர்தல் நேரம்.. பணம் பதுக்கி வைத்ததாக தகவல் - முன்னாள் திமுக MLA ஆறுமுகத்தின் உறவினர் வீட்டில் சோதனை!
02:11Car Accident : நாமக்கல் மாவட்டம்.. மரத்தின் மீது மோதிய கார் - 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!
07:42எங்கள் சாதி பெண்கள் மீது கை வைத்தால் கருவறுப்போம்; இணையத்தில் வைரலாகும் கொமதே கட்சி வேட்பாளரின் ஆணவ பேச்சு
04:31Vijay: 15 ஆண்டுகளாக உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லை; தமிழக வெற்றி கழகத்தில் வெடித்த சர்ச்சை
01:23அழையா விருந்தாளியாக வீட்டிற்கு வந்த பாம்புகள்; அசால்டாக கையில் எடுத்து சென்று வழி அனுப்பிய இளைஞர்கள்
03:01காரில் இருந்து எட்டி பார்த்த நல்ல பாம்பு; காரை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்த விவசாயி
02:07உலக நன்மை வேண்டி நாமக்கல்லில் 2000 சித்தர்கள் பங்கேற்கும் சிறப்பு யாகம்; பொதுமக்களுக்கு அழைப்பு