நாகையில் பாதசாரி உயிரிழந்த விவகாரம்; சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை அதிகாரிகள் பிடித்துச் சென்றதால் பரபரப்பு

நாகையில் பாதசாரி உயிரிழந்த விவகாரம்; சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை அதிகாரிகள் பிடித்துச் சென்றதால் பரபரப்பு

Published : Nov 24, 2023, 12:09 PM IST

நாகையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனால் மாட்டின் உரிமையாளர்களுக்கும், நகராட்சி பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

நாகை அடுத்த கோட்டைவாசல்படி மெயின் ரோட்டில் கடந்த வாரம் மாடு முட்டி பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில் சாலையில் விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் இன்று சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிந்த மாடுகளை நாகை நகராட்சி அதிகாரிகள் தூய்மை பணியாளர்களை கொண்டு மாடுகளை பிடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். 

நாகை பப்ளிக் ஆபிஸ் ரோடு, வெளிப்பாளையம், பெரிய கடைத்தெரு, நாகூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாகை - நாகூர் தேசிய நெருஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சுற்றி திரியும் மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர். தொடர்ந்து மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளை பிடித்து வைக்கப்பட்டுள்ள பகுதியில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வெளிப்பாளையம் போலீசார் அங்கிருந்தவர்களை களைந்து செல்ல அறிவுறுத்தினர். சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் மாடுகளை திரியவிட்டால் அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விஜயைச் சந்தித்த த.வெ.க. மாவட்ட செயலாளரைக் கொண்டாடிய தொண்டர்கள்!
01:42சீர்காழி அருகே பேருந்து நிலைத்தில் வசித்த முதியவர் மீட்பு: சமூக ஆர்வலருக்கு குவியும் பாராட்டுகள்!
01:59Nagore : நாகூர்.. திருடுபோன தங்க நகைகள்.. கைவரிசை காட்டி ஆட்டோவில் தப்பிய குற்றவாளி - போலீசார் அதிரடி!
01:16Nagai : பாட்டி மேல் கோபம்.. வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் - விரைந்து செயல்பட்டு மீட்ட நாகை போலீசார்! Video!
02:07நாகை நகராட்சி அலுவலகத்தில் புகுந்து ரகளை செய்த திமுக கவுன்சிலரின் கணவர்; பேனரை அகற்றியதால் ஆவேசம்!!
03:15சாதி, மதம் பேதமின்றி நாள் முழுவதும் விநியோகிக்கப்பட்ட கறி சோறு; 200 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்
03:36Ash Wednesday 2024: கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் இன்று சாம்பல் புதனுடன் துவங்கியது
03:01அவரு யோசிக்காம எந்த முடிவும் எடுக்க மாட்டார்; விஜய்யின் அரசியல் பயணம் குறித்து நடிகர் பாலா நச் பதில்
06:01மயிலாடுதுறையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கேனில் நீச்சல் அடித்த தவளை; வாடிக்கையாளர் அதிர்ச்சி
01:165 கொள்ளையர்கள் . . . 35 கி.மீ. சேசிங்; சினிமா காட்சிகளை மிஞ்சிய தமிழக போலீசாரின் அதிரடி வேட்டை