நாகையில் காப்பகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை - பாஜகவினர் பரபரப்பு புகார்

நாகையில் காப்பகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை - பாஜகவினர் பரபரப்பு புகார்

Published : Mar 10, 2023, 10:43 AM IST

நாகையில் குழந்தைகள் காப்பகத்தில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  பாஜகவினர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

 

நாகை மாவட்டம் காடம்பாடி புதிய கடற்கரை சாலையில் செயல்பட்டு வரும் நம்பிக்கை குழந்தைகள் காப்பகம், ஓஎன்ஜிசியில் பணியாற்றி வரும் பரமேஸ்வரன் மற்றும் அவரது மனைவி சூடாமணி ஆகியோரால் நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த காப்பகம் மீது பொதுமக்கள் மத்தியில் பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் சமீப காலமாக கூறப்பட்டு வருகின்றன. 

கரூரில் அடுத்தடுத்து 3 புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் அசத்தி வரும் அரசுப்பள்ளி மாணவர்

இந்த நிலையில் கடந்த வாரம் 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தையை பரமேஸ்வரன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் காலத் தாழ்த்தியதாகக் கூறப்படுகிறது. 

குடும்ப பிரச்சினையில் நபர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

மிகுந்த காலதாமதத்திற்கு இடையே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது வரை சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பரமேஸ்வரனுடைய உறவினர்கள் காவல்துறையில் மிக உயரிய பொறுப்பில் இருப்பதாகவும், அவருக்கு வேண்டப்பட்டவர்கள் மிக முக்கிய பொறுப்பில் இருந்து வருவதாலும், அவரை கைது செய்யாமல் தப்பிக்க விட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. 

எனவே பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, மக்களுக்கு காவல்துறையின் மீது உள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என குறிப்பிட்டு நாகை மாவட்ட பாஜகவினர் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். இந்த சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது‌.

விஜயைச் சந்தித்த த.வெ.க. மாவட்ட செயலாளரைக் கொண்டாடிய தொண்டர்கள்!
01:42சீர்காழி அருகே பேருந்து நிலைத்தில் வசித்த முதியவர் மீட்பு: சமூக ஆர்வலருக்கு குவியும் பாராட்டுகள்!
01:59Nagore : நாகூர்.. திருடுபோன தங்க நகைகள்.. கைவரிசை காட்டி ஆட்டோவில் தப்பிய குற்றவாளி - போலீசார் அதிரடி!
01:16Nagai : பாட்டி மேல் கோபம்.. வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் - விரைந்து செயல்பட்டு மீட்ட நாகை போலீசார்! Video!
02:07நாகை நகராட்சி அலுவலகத்தில் புகுந்து ரகளை செய்த திமுக கவுன்சிலரின் கணவர்; பேனரை அகற்றியதால் ஆவேசம்!!
03:15சாதி, மதம் பேதமின்றி நாள் முழுவதும் விநியோகிக்கப்பட்ட கறி சோறு; 200 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்
03:36Ash Wednesday 2024: கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் இன்று சாம்பல் புதனுடன் துவங்கியது
03:01அவரு யோசிக்காம எந்த முடிவும் எடுக்க மாட்டார்; விஜய்யின் அரசியல் பயணம் குறித்து நடிகர் பாலா நச் பதில்
06:01மயிலாடுதுறையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கேனில் நீச்சல் அடித்த தவளை; வாடிக்கையாளர் அதிர்ச்சி
01:165 கொள்ளையர்கள் . . . 35 கி.மீ. சேசிங்; சினிமா காட்சிகளை மிஞ்சிய தமிழக போலீசாரின் அதிரடி வேட்டை