Watch : நாகையில் சிக்கிய செல்போன் திருடன்! ரூ.1.20 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் பறிமுதல்

Watch : நாகையில் சிக்கிய செல்போன் திருடன்! ரூ.1.20 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் பறிமுதல்

Published : Mar 20, 2023, 01:57 PM IST

நாகையில் பூட்டியிருந்த கடையின் ஷட்டரை உடைத்து செல்போன்கள் திருடப்பட்ட சம்பவத்தில், சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு திருடனை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். அவரிடம் இருந்து திருடிச்செல்லப்பட்ட ரூ.1.20 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
 

நாகை நாடார் தெருவில் வசித்து வருபவர் கணேஷ்குமார். இவர், வெளிப்பாளையம் காவல் நிலையிம் அருகே சொந்தமாக செல்போன் கடையை நடத்தி வருகிறார். வழக்கம்போல் இவர் கடந்த மார்ச் 14ம் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார் ‌மறுநாள் காலை கடையை திறக்க வந்த போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு ஷோகேஸில் அடுக்கி வைத்திருந்த செல்போன்கள் திருடு போயிருந்தது தெரிய வந்தது.

உடனடியாக, இது குறித்து கணேஷ்குமார் அளித்த புகார் பேரில் கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து திருடர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் மர்ம நபரை தேடி வந்தனர்.

இந்நிலையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குமரேசன் என்ற நபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். விசாணையில் அவர் தஞ்சாவூர் மானாம்பூசாவடியை சிவன் கோவில் தேர்வைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 13 டச் போன்கள், 1 பவர் பேங் மற்றும் 1 ப்ளூடூத் என சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை மீட்டனர். கைதான நபர் மீது தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

விஜயைச் சந்தித்த த.வெ.க. மாவட்ட செயலாளரைக் கொண்டாடிய தொண்டர்கள்!
01:42சீர்காழி அருகே பேருந்து நிலைத்தில் வசித்த முதியவர் மீட்பு: சமூக ஆர்வலருக்கு குவியும் பாராட்டுகள்!
01:59Nagore : நாகூர்.. திருடுபோன தங்க நகைகள்.. கைவரிசை காட்டி ஆட்டோவில் தப்பிய குற்றவாளி - போலீசார் அதிரடி!
01:16Nagai : பாட்டி மேல் கோபம்.. வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் - விரைந்து செயல்பட்டு மீட்ட நாகை போலீசார்! Video!
02:07நாகை நகராட்சி அலுவலகத்தில் புகுந்து ரகளை செய்த திமுக கவுன்சிலரின் கணவர்; பேனரை அகற்றியதால் ஆவேசம்!!
03:15சாதி, மதம் பேதமின்றி நாள் முழுவதும் விநியோகிக்கப்பட்ட கறி சோறு; 200 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்
03:36Ash Wednesday 2024: கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் இன்று சாம்பல் புதனுடன் துவங்கியது
03:01அவரு யோசிக்காம எந்த முடிவும் எடுக்க மாட்டார்; விஜய்யின் அரசியல் பயணம் குறித்து நடிகர் பாலா நச் பதில்
06:01மயிலாடுதுறையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கேனில் நீச்சல் அடித்த தவளை; வாடிக்கையாளர் அதிர்ச்சி
01:165 கொள்ளையர்கள் . . . 35 கி.மீ. சேசிங்; சினிமா காட்சிகளை மிஞ்சிய தமிழக போலீசாரின் அதிரடி வேட்டை
Read more